உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 7.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 7

கலக்கின்றன. எண்ணெய் தோய்ந்த துணியில் அழுக்கு எளிதில் பற்றிக் கொள்வதை இதற்கு உதாரணமாகக் கூறுவதுண்டு. உயிரைத் துணியாகவும், ஐம்புலன், வாக்கு, காயம், முதலியவற்றை எண்ணெயாகவும் வினைகளை அழுக்காகவும் உபமேயப்படுத்திக் கூறுவர்.

9. வீடு (மோக்ஷம்) :

உபமான

ஐந்தவித்து வினைகளினின்றும் நீங்கிய உயிர் கேவல ஞானம், கேவல தரிசனம், கேவல வீரியம், கேவல சுகம் என்னும் கடையிலா அறிவு, கடையிலாக் காட்சி, கடையிலா வீரியம், கடையிலா இன்பம் என்பவைகளை அடைந்து, எல்லா உலகங்களுக்கும் உயர்ந்த உலகமாகிய பெறற்கரிய வீட்டுலகம் பெற்று எல்லோராலும் வணங்கப்படும் அருகந்த நிலையை யடைவது மோக்ஷம் அல்லது வீடு எனப்படும்.

66

‘வருவழி இரண்டையும் மாற்றி முன்செய் அருவினைப்பயன் அனுபவித் தறுத்திடுதல் அது வீடாகும்.

99

(மணிமேகலை, 27 : 199-201.)

இந்த ஒன்பது பொருள்களின் விரிவான விளக்கத்தைச் சமணசமய நூல்களில் கண்டுகொள்க.

குறிப்பு : சமண சமய தத்துவ நூல்களில் கடவுளைப் பற்றிக் கூற வில்லை. பந்தத்தினின்றும் விடுபட்டு மோக்ஷ நிலையை யடைந்த உயிரே கடவுள் என்பது சமணசமயக் கருத்து. சைவம், வைணவம் முதலிய சமயங்களில், உயிர்களுக்கு அப்பாற் பட்ட ஒரு தனிக்கடவுள் கூறப்படுவதுபோல, சமண சமயத்தில் தனிப்பட்ட ஒரு கடவுள் கூறப்படவில்லை.

மேற்கூறிய ஒன்பது பொருள்களின் உண்மையை அறிந்து கொள்வது நன்ஞானம் என்றும், இவற்றின் தன்மையை ஐயப்பாடின்றி உணர்ந்து கொள்வது நற்காட்சி என்றும், நன்ஞானம் நற்காட்சி இரண்டையும் ஒரு தன்மைத்தாக மனத்திற்கொண்டு ஒழுகுவது நல்லொழுக்கம் என்றும் கூறப்படும். இதனை இரத்தினத்திரயம் என்றும் மும்மணி என்றும் கூறுவர். இரத்தினத் திரயம் வீடு பேற்றிற்கு இன்றியமையாதது.