278
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம்-6
பழைய உரை உண்டு. மகா வித்வான் காஞ்சீபுரம் சபாபதி முதலியார் அவர்கள் 1864-இல் அச்சிட்ட தேவாரத் திருமுறையில், அந்தப் பழைய அச்சிட்டிருக்கிறார்கள். வுரையை ஈண்டும்
உரையை
தருகின்றேன்.
அவ்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான் பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
பிரம புரத்துறை பெம்மா னெம்மான்
1
முதலடி
பதபொருள் : பிரமம் ஞானாகாசமாகிய பராசத்தியை, புரத்துறை – அந்தப் பரிபூரணத்தை மிகுதியாக வியக்கப்பட்டது, பெம்மான் - பெருமான், எம்மான் - எந்தப் பெரியோன்.
பொழிப்பு : ஞானாகாசமாகிய பராசத்தியான பரி பூரணத்தை மிகுதியாக வியந்து அந்தப் பராசக்திக் கதீதமாகிய சுகமே வடிவாய் முதல் நடு விறுதி காணப்படாத வஸ்து எந்தப் பெரியோன்.
இரண்டாமடி
பதப்பொருள்: பிரமபுரத்து
மேல் நிலத்து, உறை - தண்ணீர்,
பெரும் - விருப்பம், மான் - மான்போலும் விழியுடைய பெண், எம் எம்முடைய, ஆன் - ஆன்மா.
-
பொழிப்பு : மேல் நிலமாகிய ஆகாசத்தின்கண்ணே யோடா நின்ற கங்காதேவியை விரும்பித் திருமுடியிலே வைத்தவன், எம்மை நீங்காத நிலைமையையுடைய எமதுயிர்.
மூன்றாமடி
-
பதப்பொருள்: பிரமம் - பிரமதத்துவம், புரம் - சரீரம், உறை எண்ணுதல், பெம் - ஆசை, ஆன் - அமையாமை, எம்மான் – என்னை யொக்க வந்தவன்.
என்னை
பொழிப்பு : பிரரூபத்திலே யெண்ணப்பட்ட முத்தியிலே விடுகைக்கு அமையாத விருப்பமுள்ளவனாயென்னை யொக்க வந்தவன்.