28
III.
மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் 8
அபிதம்ம பிடகம்:
1. தம்ம ஸங்கனீ
2.
விபங்க
3. கதாவத்து
4. புக்கல பஞ்ஞத்தி
5. தாதுகதா
6. யமகம்
7. பட்டானம்
|
அத்தஸாலிm
ஸம்மோஹ வினோதனீ
பஞ்சப்பகரண அட்டகதா
ஆசார்ய புத்த கோஷர்
இதுகாறும் கூறப்பட்டவை பழைய பௌத்தமாகிய தேரவாத பௌத்த நூல்கள். இவையன்றி, இன்னும் சில நூல்கள் தேரவாத பௌத்தத்தில் உள்ளன. விரிவஞ்சி அவற்றை இங்குக் கூறாமல் விடுகின்றோம். தேரவாத பௌத்த நூல்கள் எல்லாம் பாலி மொழியிலே எழுதப்பட்டவை. பழைய தேரவாத பௌத்தத்தை, ஈனயானம் என்றும் கூறுவர்.
தேரவாத பௌத்தத்திலிருந்து, பிற்காலத்தில் பிரிவுண்டது மகாயான பௌத்தம். மகாயான பௌத்தர்கள், திரிபிடகத்தில் உள்ள சில பகுதிகளைத் தள்ளியும், கௌதம புத்தர் கூறாத வேறு சில கருத்துக்களைப் புகுத்தியும் தமது மதநூல்களை அமைத்துக் கொண்டனர். மகாயான பௌத்தர்கள் தம் மதநூல்களை வடமொழியில் எழுதி வைத்தனர். அந்நூல்களின் பெயர்களை, விரிவஞ்சி ஈண்டுக் குறிக்காமல் விடுகின்றோம்.
தமிழிலே, சிவஞான சித்தியார் (பரபக்கம்), நீலகேசி (2 முதல் 5ஆவது சருக்கம் வரையில்) என்னும் நூல்களில் பௌத்த மதத் தத்துவங்கள் கூறப்பட்டு மறுக்கப்படுகின்றன. இவை முறையே சைவ, சைன மதத்தவரால் எழுதப்பட்டவை. மணிமேகலை 30ஆவது காதையிலே தேரவாத பௌத்த தத்துவங்கள் விரிவாகக் கூறப்படுகின்றன. மணிமேகலையைத் தவிர, ஏனைய குண்டலகேசி முதலிய பௌத்தத் தமிழ் நூல்கள் இறந்துவிட்டன.