உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 9.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் -9

பிறகு போதிசத்துவர் அவ்விரவின் இடையாமத்திலே முன் போலவே யோகத்தில் அமர்ந்து அதன் மூலமாக நான்கு தியானங்களை அடைந்து நான்காவது தியானத்துக்கப்பால் தமது மனத்தைச் செலுத்தி ஜனங்களுடைய பிறப்பு இறப்புக்களைக் காணலானார். அப்போது இறக்குந் தருணத்தில் இருக்கிற உயிர்களையும், கருவிலே கிடந்து பிறக்குந் தருணத்தில் இருக்கிற உயிர்களையும், நன்மைகளைச் செய்த காரணத்தினாலே இன்பங்களை அனுபவிக்கிற உயிர்களையும் தீமைகளைச் செய்த படியினாலே துன்பங்களை அனுபவிக்கிற உயிர் களையும் அவர் தமது மனக்காட்சியில் கண்டார். இவ்வாறு உயிர்களுடைய பிறப்பையும் இறப்பையும் கண்டபடியினாலே, அதுபற்றியிருந்த மாயை இவருக்கு இல்லாமற் போயிற்று. பிறப்பு இறப்பைப்பற்றிய மாயை நீங்கிவிடவே பதினாறுவிதமான ஐயங்கள் நீங்கிவிட்டன. இதுவே, போதி சத்துவருக்கு இரண்டாவதாகக் கிடைத்த காம்ஷாவிதரண விசுத்தி ஆகும்.

பிறகு இரவின் கடைசி யாமமாகிய மூன்றாவது யாமம் வந்தது. முன்போலவே போதிசத்துவர் பிரணாயாமம் செய்து யோகத்தில் அமர்ந்து நான்காவது நிலையையடைந்து உண்மைத் தத்துவத்தைக் காண மனத்தைச் செலுத்தினார். அப்போது, பஞ்ச ஸ்கந்தங்கள், அநித்யம், துக்கம், அநாத்மம் என்பவற்றைக் கண்டு, ஒவ்வொன்றையும் ஆராய்ந்து பார்த்து, பன்னிரண்டு நிதானங்களிலே சொல்லுகிறபடி ஏழு விதமான விசுத்திமார்க்கத்தைக் கண்டார். இவைகளை மேன்மேலும் ஆராய்ந்து பார்த்து, அநித்திய தரிசனம் மூலமாக நித்தியம் என்னும் பொருளையும், துக்க தரிசனம் மூலமாகச் சுகம் என்னும் பொருளையும், அனாத்ம தரிசனம் மூலமாக ஆத்மசஜ்ஞை என்னும் பொருளையும் அறிந்தார். அவ்வாறே ஆராய்ந்து பார்த்து, விராக தரிசனத்தினாலே ராகத்தையும், நிர்விதானு தரிசனத்தினாலே நந்தி (ஆசை)யையும், நிரோதானு தரிசனத்தினாலே சமுதாயத்தையும் பிரதி நிச்சர்க்க தரிசனத்தினாலே ஆதானத்தையும் நீக்கினார்.

"

பிறகு, எல்லா சம்ஸ்காரங்களையும் இரண்டாகப் பிரித்து உதயம் (தோற்றம்), வியயம் (அழிவு) என்னும் முறையில் ஆராய்ந்து பார்த்த போது ஆலோகம், பிரீதி, பிரஸ்ரப்தி, ஞானம், சிரத்தை, ஸ்மிருத்தி, சுகம், உபேக்ஷை, வீரியம், நிகாந்தி என்கிற விதர்சனா ஞானங்களும் இவற்றினின்று எதிர்மாறான ஞானங் களும் தோன்றின. (விதர்சனா ஞானம் அடைந்தபடியினாலே இவருடைய சரீரத்திலே இருந்த