164
மயிலை. சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 9
நீயே உனக்குத் தலைவன், உன்னையன்றி வேறு யார்தான் உனக்குத் தலைவராகக் கூடும்? ஒருவர் தன்னைத்தானே அடக்கி ஒழுகக் கற்றுக் கொள்வாரானால், அவர் பெறுதற்கரிய தலைவரைப் பெற்றவர் ஆவார்.
ஆக்கத்தைத் தராததும் தீமையைப் பயப்பதும் ஆகிய செயல்களைச் செய்வது எளிது. நன்மையைத் தருகிற நல்ல காரியங்களைச் செய்வது மிக அரிது.
அசட்டையாயிராமல் விழிப்பாக இரு. அறத்தை முழுதும் கைக் கொண்டு ஒழுகு. அறவழியில் நடப்பவர்கள் அவ்வுலகத்திலும் இவ் வுலகத்திலும் சுகம் அடைகிறார்கள்.
"பாவங்களைச் செய்யாதிரு. நல்லவற்றைச் செய். மனத்தைச் சுத்தப் படுத்து!” என்னும் இவை புத்தருடைய போதனைகளாக இருக்கின்றன.
துக்க
புத்தரையும் தர்மத்தையும் சங்கத்தையும் சரணம் அடைந்து, நற்காட்சி பெற்று, நான்கு வாய்மைகளான துக்கம், துக்க காரணம், நீக்கம், துக்கம் நீக்கும்வழி ஆகிய இவைகளையும், துன்பத்தை நீக்குகிற மார்க்கத்துக்கு அழைத்துச் செல்கிற அஷ்டாங்க மார்க்கத்தையும் காண்கிறவர்கள் உண்மையான புகலிடத்தை யடைகிறார்கள். இதை அடைந்தவர்கள் எல்லாத் துன்பங்களிலிருந்தும் விடுபடுகிறார்கள்.
தீ
கோபத்தை அன்பினால் வெல்க. தீமையை நன்மையினாலே வெல்க. கருமியைத் தானத்தினால் வெல்க. பொய்யை மெய்யி னாலே வெல்க.
உண்மை பேசுவாயாக; சினத்தைத் தவிர்ப்பாயாக; உன்னிடம் இருப்பது மிகக் கொஞ்சமானாலும் யாசிக்கிறவர்களுக்கு அதை ஈவாயாக. இம்மூன்றையும் செய்கிற ஒருவர் தேவர்கள் இருக்கிற இடத்திற்குச் செல்கிறார்.
முற்றும் இகழப்படுபவரும் முற்றும் புகழப்படுபவரும் அன்றும் இல்லை; இன்றும் இல்லை; என்றும் இல்லை.
உடம்பினால் உண்டாகிற குற்றங்களை அடக்கிக் காத்துக் கொள். உடம்பை அடக்கி ஆள்க. உடம்பினால் உண்டாகும் தீய காரியங்களை விலக்கி நல்ல காரியங்களைச் செய்க.