74
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 10
6
இல்லாமல் போகும் என்று கருதிச் சுந்தரியைக் கொலை செய்யும்படி ஏற்பாடு செய்தார்களாம். இந்தச் செய்தி விசாரணையில் வெளியாயிற்று.
கொலை செய்யத் தூண்டியவர்களையும் கொலை செய்தவர் களையும் நகரத் தெருக்களில் ஊர்வலமாக அழைத்துக் கொண்டு போய் இவர்கள் செய்த சூதுகளையும் புரட்டுக்களையும் மக்களுக்கு வெளிப்படுத்தும்படி அரசர், சேவர்களுக்குக் கட்டளையிட்டார். அதன்படியே இவர்கள் நகரமெங்கும் சுற்றிக் கொண்டு வரப்பட்டனர். பிறகு, அவர்கள் குற்றத்திற்குத் தக்கபடி தண்டனை கொடுக்கப் பட்டனர்.
நகர மக்கள் உண்மை அறிந்த பிறகு ஆச்சரியமடைந்தார்கள். சுந்தரி வேண்டுமென்றே பொய்ப்பிரசாரம் செய்து மக்களை நம்பச் செய்ததை எண்ணி அவள் மேல் கோபங்கொண்டார்கள். பௌத்த பிக்ஷுகளின்மேல் மக்கள் வீணாக அவதூறு பேசி நிந்தனை செய்ததை எண்ணி மனம் வருந்தினார்கள். பெளத்த மதம் நாளுக்கு நாள் மக்களிடம் செல்வாக்கு அடைந்து சிறப்புப் பெறுவதைப் பொறாமல், வேறு மதத்துச் சந்நியாசிகள் வஞ்சனையாகச் செய்த சூது, வீண் பழி என்பதை நன்றாகத் தெரிந்து கொண்டார்கள்.
அன்று முதல் பௌத்தர்களிடம் மக்களுக்கு முன் பிருந்ததை விட நல்ல அபிப்பிராயமும் நன்மதிப்பும் ஏற்பட்டன. அன்பாகவும் ஆதரவாகவும், புத்தரைப் போற்றினார்கள்.