உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

114

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

சாசனச் செய்யுள்

எங்கள் நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே - கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்ட தெங்கே யினிமறைப்பா ரென்று.

ஆதிநாதர்

பங்கள ராயர்

இடம் : புதுக்கோட்டை, திருமெய்யம் தாலுகா, காரையூர் கிராமம். மாரியம்மன் கோவிலுக்கு முன்புறமுள்ள ஒரு கல்லில் எழுதப் பட்டுள்ள சாசனம்.

பதிப்பு: புதுக்கோட்டை சாசனங்கள், எண் 998 (No. 998. I.P.S.) விளக்கம் : பங்களராயர் என்னும் தமிழ்ப் புலவரின் வீட்டுப் பெயரைக் கூறுகிறது இந்தச் செய்யுள்.

சாசனச் செய்யுள்

பாரார் தமிட்புலவன் பங்களராயன் பைம்பொற் சீரா ரகத்தின்பேர் செப்புங்கால் - ஏராருங் காராளர் கானார் வருங்கற்பக வீரரெனும்

பேராளர் தம்முடைய பேர்.

குறிப்பு :- தமிட் புலவன் என்பது தமிழ்ப் புலவன் என்றிருத்தல் வேண்டும்.

சொக்கநாத இலக்கயன்

இடம் : புதுக்கோட்டை, திருமெய்யம் தாலுகா, அம்மன் குறிச்சி, சுந்தரேசுவரர் கோவில், முன் மண்டபத்தில் உள்ள செய்யுள்.

பதிப்பு : புதுக்கோட்டை சாசனங்கள், எண் 992 (No. 992. 1. P.S.)