114
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14
சாசனச் செய்யுள்
எங்கள் நலக் குன்றைப்பார்த் தேழுலகு மீன்றவுமை நங்கை பலகாலும் நகைசெயுமே - கங்கையுறை கொங்கேய் கமழ்செடிலம் போய்க்குடுமி யாய்விட்ட தெங்கே யினிமறைப்பா ரென்று.
ஆதிநாதர்
பங்கள ராயர்
இடம் : புதுக்கோட்டை, திருமெய்யம் தாலுகா, காரையூர் கிராமம். மாரியம்மன் கோவிலுக்கு முன்புறமுள்ள ஒரு கல்லில் எழுதப் பட்டுள்ள சாசனம்.
பதிப்பு: புதுக்கோட்டை சாசனங்கள், எண் 998 (No. 998. I.P.S.) விளக்கம் : பங்களராயர் என்னும் தமிழ்ப் புலவரின் வீட்டுப் பெயரைக் கூறுகிறது இந்தச் செய்யுள்.
சாசனச் செய்யுள்
பாரார் தமிட்புலவன் பங்களராயன் பைம்பொற் சீரா ரகத்தின்பேர் செப்புங்கால் - ஏராருங் காராளர் கானார் வருங்கற்பக வீரரெனும்
பேராளர் தம்முடைய பேர்.
குறிப்பு :- தமிட் புலவன் என்பது தமிழ்ப் புலவன் என்றிருத்தல் வேண்டும்.
சொக்கநாத இலக்கயன்
இடம் : புதுக்கோட்டை, திருமெய்யம் தாலுகா, அம்மன் குறிச்சி, சுந்தரேசுவரர் கோவில், முன் மண்டபத்தில் உள்ள செய்யுள்.
பதிப்பு : புதுக்கோட்டை சாசனங்கள், எண் 992 (No. 992. 1. P.S.)