உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 14.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

238

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 14

நந்திவர்மனின் 3-ஆம் ஆண்டில் எழுதப்பட்ட இச் சாசனம், மீபுழை நாட்டு வடுவூர் கணவதிமான் என்பவர் 200 பேருக்குத் திருவாதிரையில் உணவு கொடுக்க நெல் தானம் செய்ததைக் கூறுகிறது.

சாசனம் வாசகம் 2

1. ஸ்வஸ்தி ஸ்ரீ || கோநந்திப் போந்த

ரையர்க்கு யாண்டு 3-ஆவது

மீ

2.

3.

புழை நாட்டு வடுவூர்க் கணவதிமா

4.

ன்னாயின பகைச்சந்திர விசைஅ

5.

6.

7.

ரையன் றிருவாதிரை நான்றுஅ ட்டழிய வைத்த அரிசி 200 இரு நூற்றுநாழி நூற்துவர்க்கு ||

3 - ஆம் ஆண்டு

தென் ஆர்க்காடு மாவட்டம், திண்டிவனம் தாலுகா, கிளியனூர் வைகுண்டவாசப் பெருமாள் கோயிலின் தென் புறச் சுவரில் உள்ள சாசனம் :

திகைத்திறல் கிராமத்தார், ஓய்மாநாட்டுக் கிளிஞெலூரில் திகைத்திறல் விஷ்ணுக்கிருகம் என்னும் கோயிலைக் கட்டி, விளக்குக் காக 300 ஆடும், திருவமுதுக்காக இரண்டு நிலமும் தானம் செய்ததைக் கூறுகிறது.

சாசன வாசகம்3

3

1. ஸ்வஸ்தி ஸ்ரீ || கோவிசைய நந்திவிக்கிரம பற்மக்கி யாண்டு மூன்றாவது ஓ

2.

3.

4.

ய்மானாட்டு கிளிஞெலூர் திகைத்திறல் விஷ்ணுக்கிருகம் எடு

ப்பித்த திகை திறலார் திருவிளக்குக்கு வைத்த ஆடு முந்நூறும் இவரே திருவமு

துக்கு வைத்த ஸ்ரீ கோயிலின் கீழை செறுவிரண்டும்

இறையிலி. இத்தன்மம் ரக்ஷித்தார் ஸ்ரீ பாதம் என்றலைய் மேலது.