கிறித்தவக் கீர்த்தனைகள்
மூப்ப ராசாரியர் அறையும் – ஒரு முள்ளின் மாமுடி யெள்ளவே பெருங் கள்ள னாயினர் வள்ள லேசுவும்
முன்பு யூதர் கொண்ட மதமே - முடியும் வரை ஒரு பிடியாய்
முண்டு செய்து கண்ட வதமே
பொந்தியுப் பிலாத்து பதியே புரையரினம்
இரைய மனம்
போலவே மயங்கும் விதியே - யூதர்
புத்திரத்தையே பெற்றதில்லையோ எத்திறத்தவர் செற்ற தென்னையே
புல்லியர்க்கே யிந்த ஞாலமே - புனிதமுள
இனியகுண
நல்லவர்க்கோ இல்லை காலமே
சிந்துர மிகுந்த காயமே - சிந்தாமணியோ
நந்தாவொளியோ
சேயிடை பரந்து பாயுமே – அதைச்
சிந்தை நொந்து மிகுந்து சிந்தியே
அந்தி சந்தி விழுந்து வந்தியே
சீரை யோடிருந்த வண்ணமே செந்நீர் பருகிப்
பின்னே முழுகச்
சேரும் வெள்ளைத் தூயவண்ணமே!
38
'தோடுடைய செவியன்' என்ற மெட்டு
பாரின்பவப் பலியாய்ப் பர மாசுதன் பாவிகளை மேவி சோரும் வெயில் கரங்கால்களில் சோரவோர் சோரிமிகுமாரி கூரும்பல குடையாணிகள் கூடமே கொண்டறைய வன்றே சோரன் போலச்சிலுவை யறையுண்டதும் சுணங்க னென்னாலன்றோ! முள்ளின்முடி யுமிழ்நீரொடு சேயுடை மூங்கிற்கழை தாங்கி எள்ளன்மொழி யெழுதியெதிர் ஏசவும் ஏதும்புக லாதே வெள்ளம் போலக் குருதிவழிந் தோடநீர் வேட்கை மிகவிஞ்சி
145
கள்ளன் போலச் சிலுவையறை யுண்டதும் கயவனென் னாலன்றோ!