உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

308

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

பண்ணல்

வலக்கைப் பெருவிரல் குரல்கொளச் சிறுவிரல்

விலக்கின் றிளிவழி கேட்டும் ... ..

இணைவழி யாராய்ந் திணைகொள முடிப்பது

விளைப்பரு மரபிற் பண்ண லாகும்.

1

பரிவட்டணை

பரிவட் டணையி னிலக்கணந் தானே மூவகை நடையின் முடிவிற் றாகி வலக்கை யிருவிரல் வனப்புறத் தழீஇ உடக்கை விரலி னியைவ தாகத்

தொடையொடு தோன்றியுந் தோன்றா தாகியு

நடையொடு தோன்று நயத்த தாகும்.

2

ஆராய்தல்

ஆராய்த லென்ப தமைவாக் கிளப்பிற் குரன்முத லாக விணைவழி கேட்டு மிணையி லாவழிப் பயனொடு கேட்டுந் தாரமு முழையும் தம்மிற் கேட்டும் விளரி கைக்கிளை விதியுளிக் கேட்டுந் தளரா தாகிய தன்மைத் தாகும்.

தைவரல்

தைவர லென்பது சாற்றுங் காலை மையறு சிறப்பின் மனமகிழ் வெய்தித் தொடையொடு பட்டும் படாஅ தாகியு

நடையொடு தோன்றி யாப்புநடை யின்றி யோவாச் செய்தியின் வட்டணை யொழுகிச் சீரேற் றியன்று மியலா தாகியும்

நீரவாகு நிறைய தென்ப.

செலவு

செலவெனப் படுவதன் செய்கை தானே பாலை பண்முறை திறமே கூடமென நால்வகை யிடத்து நயத்த தாகி

3

4