உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

யியக்கமு நடையு மெய்திய வகைத்தாய்ப்

பதினொ ராடலும் பாணியு மியல்பும்

விதிநான்கு தொடர்ந்து விளங்கிச்செல் வதுவே.

விளையாட்டு

விளையாட் டென்பது விரிக்குங் காலைக்

கிளவிய வகையி னெழுவகை யெழாலு

மளவிய தகைய தாகு மென்ப.

கையூழ்

கையூ ழென்பது கருதுங் காலை யெவ்விடத் தானு மின்பமுஞ் சுவையுஞ் செவ்விதிற் றோன்றிச் சிலைத்துவர லின்றி நடைநிலை திரியாது நண்ணித் தோன்றி நாற்பத் தொன்பது வனப்பும் வண்ணமும் பாற்படத் தோன்றும் பகுதித் தாகும்.

குறும்போக்கு

துள்ளற் கண்ணுங் குடக்குத் துள்ளும்

தள்ளாதாகிய வுடனிலைப் புணர்ச்சி

கொள்வன வெல்லாங் குறும்போக் காகும்.

யாழ் வாசிக்கும் முறமை

309

5

6

7

00

சிலம்பு, 8-26 அடி உரையில் அரும்பதவுரையாசிரியரும். அடியார்க்கு நல்லாரும் மேற்கோள் காட்டியது:

நல்லிசை மடந்தை நல்வேழில் காட்டி யல்லியம் பங்கயத் தயனினிது படைத்த தெய்வஞ் சான்ற தீஞ்சுவை நல்யாழ் மெய்பெற வணங்கி மேலோடு கீழ்புணர்த் திருகையின் வாங்கி யிடவயி னிரீஇ

மருவிய வினய மாட்டுதல் கடனே.