உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

310

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

(வினயம் - தேவபாணி)

வரிப்பாட்டு

சிலப்பதிகாரம், கானல்வரி உரையில் அரும்பதவுரையாசிரியர்

காட்டிய நூற்பாக்கள்.

கூடைச் செய்யுள்.

கூடை யென்பது கூறுங் காலை

நான்கடி யாகி யிடையடி மடக்கி

நான்கடி யஃகி நடத்தற்கு முரித்தே.

வாரச் செய்யுள்.

வார மென்பது வகுக்குங் காலை

நடையினு மொலியினு மெழுத்தினு நோக்கித் தொடையமைந் தொழுகுந் தொன்மைத் தென்ப.

முகமுடைவரி

நிலமுத லாகிய வுலகியல் வரிக்கு

முகமாய் நிற்றலின் முகமெனப் படுமே.

சிந்து நெடிலுஞ் சேரினும் வரையார்.

சார்த்துவரி

1

2

3

♡ 4

பாட்டுடைத் தலைவன் பதியொடும் பேரொடுஞ்

சார்த்திப் பாடிற் சார்த்தெனப் படுமே.

5

முரிந்தவற

...

முரிச்சார்த்து

குற்றெழுத் தியலாற் குறுகிய நடையாற் யெற்ற வடித்தொகை மூன்று மிரண்டுங் குற்ற மில்லெனக் கூறினர் புலவர்.

நிலைவரி

முகமு முரியுந் தன்னோடு முடியு

நிலையை யுடையது நிலையெனப் படுமே.

6

7