உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

312

மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 15

யாழ்வகை

பேரியாழ் பின்னு மகரஞ் சகோட முடன்

சீர்பொலியுஞ் செங்கோடு செப்பினார் - தார்பொலிந்து மன்னுந் திருமார்ப வண்கூடற் கோமானே

பின்னு முளவே பிற.

ஒன்று மிருபது மொன்பதும் பத்துடனே

நின்ற பதினான்கும் பின்னேழுங்-குன்றாத

00

நால்வகை யாழிற்கு நன்னரம்பு சொன்முறையே மேல்வகை நூலோர் விதி.

9

கோட்டின தமைதியுங் கொளுவிய வாணியு

மாட்டிய பத்தரின் வகையு மாடக முந்

தந்திரி யமைதியுஞ் சாற்றிய பிறவு

மூந்திய நூலின் முடிந்த வகையே

குழல்-வங்கியம்

ஓங்கிய மூங்கி லுயர்சந்து வெண்கலமே பாங்குறு செங் காலி கருங்காலி-பூங்குழலாய் கண்ண னுவந்த கழைக்கிவைக ளாமென்றார் பண்ணமைந்த நூல்வல்லோர் பார்த்து.

உயர்ந்த சமதலத் தோங்கிக் கானான்கின்

மயங்காமை நின்ற மரத்தின் மயங்காமே முற்றிய மாமரந் தன்னை முதளடிந்த

குற்றமிலோ ராண்டிற் கொளல்

சொல்லு மிதற்களவு நாலைந்தாஞ் சுற்றளவு நல்விரல்க ணாலரையா நன்னுதலாய்-மெல்லத் துணையளவு நெல்லரிசி தூபமிடமாய் தும்பிட மாய வளைவலமேல் வங்கிய மென்.

இருவிரல்க ணீக்கி முதல்வாயேழ் நீக்கி

மருவு துளையெட்டு மன்னும்-பெருவிரல்க ணாலங்சு கொள்க பரப்பென்ப, நன்னுதலாய்! கோலஞ்செய் வங்கியத்தின் கூறு.

10