உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 15.pdf/331

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மறைந்துபோன தமிழ் நூல்கள்

331

யாழ்ப்பாணத்திலிருந்த இந்தப் புத்தகசாலையை அழித்துவிட்டான். அவன் தமிழனல்லாத சிங்களவன்: ஆகையால், தமிழ் நூல்களை அழிப்பது பற்றி அவன் கவலைப்படவில்லை.

சேரநாடு பிற்காலத்தில், கி.பி. 16ஆம் நூற்றாண்டில் மலை யாள மொழியுள்ள நாடாக மாறிற்று. தமிழ் நூல்களைப் பற்றி மலையாளிகளில் பெரும்பான்மையோர் கவலைப்படவில்லை, அந்தச் சேரநாட்டுத் தமிழ் நூல்கள் போற்றுவார் அற்றுப்பையப்பைய மறைந்துபோயின.

அந்நூல்களில் சில, மலையாள எழுத்தினால் எழுதப்பட்டுப் போற்றப்பட்டுவந்தன. வலைவீசு புராணம், பொன்னி புத்தான கதை முதலியவை அவற்றைச் சேர்ந்தவை. இவ்விரண்டு நூல்களும் மலை யாள எழுத்தில் அச்சிடப்பட்டுள்ளன. ஆனால், தமிழ் அறியாதவர் களால் பதிப்பிக்கப்பட்டபடியால் அவைகளில் பல செய்யுள்களின் சரியான உருவம் தெரியாமல் சிதைந்து காணப்படு கின்றன.

மலையாள எழுத்தில் எழுதப்பட்டுள்ள தமிழ் நூல்கள் பெரிதும் புறக்கணிக்கப்பட்டு நாளடைவில் மறைந்துபோகின்றன. மலையாள எழுத்தில் எழுதப்பட்டிருப்பதனால், அந்த எழுத்தை அறியாத தமிழர் அவை இன்ன நூலென்றும் அறிவதில்லை, மலையாள எழுத்தில் எழுதப்பட்டிருந்தாலும், மொழி தமிழாக இருப்பதனால், தமிழ் அறியாத மலையாளிகள் அந்நூல்களைப் போற்றுவதில்லை: இவ்வாறு மலை யாள எழுத்தில் எழுதப்பட்ட தமிழ் நூல்கள் மறைந்துபோகின்றன.

தமிழ் நாட்டிலே கி.பி. 17, 18ஆம் நூற்றாண்டுகளில், அரசியல் நிலை மிக மோசமாய்விட்டது. மத ஒற்றுமை இல்லாத வேற்று மதக்காரர்களும் வேற்று மொழிக்காரர்களும் நமது நாட்டிலே வந்து, அரசியற் குழப்பங் களையும் போர்களையும் உண்டாக்கி, நாட்டின் அமைதியைக் கெடுத்துப் பாதுகாப்பை அழித்தனர். பிரெஞ்சுக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும், ஆங்கிலக் கிழக்கிந்தியக் கம்பெனியாரும், முகம் மதியர்களும், மராட்டி யரும் அந்த நூற்றாண்டுகளில் தமிழ்நாட்டில் நிகழ்த்திய அட்டூழி யங்கள் சொல்லிமுடியா. பெரிய நகரங்கள் முதல் சிறிய பட்டி தொட்டிகள் வரையில் அவர்களின் அட்டூழியம் மக்களைத் தாக்கியது. குழப்பங்களும், கொலையும், கொள்ளையும், போர்களும், கலங்களும், படையெடுப்புகளும் தென் இந்தியா முழுவதும் நிகழ்ந்தன.

அந்தக் காலத்தில்தான் பெரும்பான்மையான பழைய நூல்கள் அழிந்து மறைந்தன. உயிருக்கும் பொருளுக்கும் பாதுகாப்பில்லாமல்