பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
ஜீவ:
சக:
ஜீவ:
செவிலி:
(சகடரை நோக்கி)
நல்லது சகடரே! சொல்லிய படியே
135 மொழிகுவம் வாணிபால்! மொய்குழற் சிறுமி அழகினில் மயங்கினள்; அதற்கென்? நும்மனப் படியிது நடத்துவம். விடுமினித் துயரம். இவ்வுரை யொன்றுமே என்னுயிர்க் குறுதி. திவ்விய திருவடி வாழுக சிறந்தே!
(செவிலியின் முக நோக்கி)
77
(சகடர் போக, செவிலி வர)
140 என்னை இவள்முகம் இப்படி யிருப்பது?
தோன்றம் நன் றன்றே!
நேற்றிரா முதலா -
பிணியோ என்கண் மணிக்கு?
ஜீவ:
செவிலி:
பிணியா
ஜீவ:
செவிலி:
யாதுமொன் றில்லை; ஏதோ சிறுசுரம்.
சுரம்!சுரம்! ஓ!ஓ! சொல்லுதி யாவும்.
145 அரந்தையொன் றறியாள்! ஐயோ! விளைந்தவை உரையாய் விரைவில்; ஒளிக்கலை யொன்றும். வந்தவா றென்னை? நடந்தவா றென்னை?
அறியேம் யாங்கள். ஐய!அம் மாயம் நறவுமிழ் நளினம் பொலிவிழந் திருப்ப
150 நம்மனை புகுந்த செல்வி. எம்முடன் மாலையி லீலைச் சோலை யுலாவி அமுதமூற் றிருக்குங் குமுதவாய் விண்டு நயவுரை பலவுங் குயிலின் மிழற்றி மலைய மாருதம் வந்துவந் துந்த
155 நிலவொளி நீந்திநந் நெடுமுற் றத்துப்
பந்துவந் தாடிமேன் மந்திர மடைந்தே
நளினம் - தாமரை. குமுத வாய் - ஆம்பல் மலர்போன்ற வாய். மேல் மந்திரம் - மாடிவீடு.