82
20
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20
வாடி வாயது மூடி மெளனமாய்
வருந்தி யிருந்ததாய்க் கண்ட கனாவும்
நேற்றன் றோவெனக் கியம்பினை! நெஞ்சில் தோற்றிய தெல்லாம் இங்ஙனஞ் சொல்லும்
பேதாய்! இன்றெனக் கென்னோ
25
ஓதா யுன்றன் உளமுறு துயரே!
செவிலி:
ஜீவ:
30
35
40
உன்பிதா உலகாள் வேந்தன் அன்பாய்ச் சொல்லா யென்னில் துப்பிதழ் துடித்துச் சொல்ல உன்னியுஞ் சொல்லா தடக்கில் யாம்படுந் துயரம் அறிந்துங்,
காம்படு தோளீ! கருதாய் போன்மே.
ஐயோ! இதற்கென் செய்வேன்? ஆ! ஆ!
பொய்யோ பண்ணிய புண்ணிய மனைத்தும்? பிள்ளை யில்லாச் செல்வங் கள்ளியிற்
சோறே போலப் பேரே யன்றி
வேறே யென்பயன் விளைக்கு மென்றுனி
நெடுநாள் நைந்து நொந்து கெடுவேன்!
பட்டபா டெல்லாங் கெட்டுப் பரிதி
வந்துழி யகலும் பனியெனச் சுந்தர
முனிவன் முயன்ற வேள்வியாற் பிள்ளைக் கனியென வுனையான் கண்டநாள் தொட்டு, நின்முக நோக்கியும் நின்சொற் கேட்டும் என்மிகை நீக்கி இன்ப மெய்தி,
உன் மன மகிழ்ச்சிக் குதவுவ உஞற்ற
உயிர்தரித் திருந்தேன்! செயிர்தீ ரறமும்
1
2
பிசிதமரம் - வேப்பமரம். வானவன் - தேவன். சேயது தேவன். சேயது - தூரத்தில் உள்ளது. போந்தை - பனை. உன்னி - எண்ணி. துப்பிதழ் – பவழம் போன்று சிவந்த உதடு. காம்பு அடு - மூங்கிலைப் பழிக்கும். போன்ம் போலும். பரிதி - சூரியன். பரிதி வந்துழி அகலும் பனி, என்பது 'சூரியனைக் கண்ட பனி போல' என்னும் பழமொழி. மிகை - துன்பம், வருத்தம்.