பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்
பச்சாத் தாபப் படுத்துவம்; நிச்சயம். நண்ணிய நமது கனாவின்
எண்ண மேகினும் ஏகும் இனியே.
(புருடோத்தமன் போக)
141
(காவற் படைஞரும், சேவகர்களும் அருள்வரதனைச் சுற்றி நிற்க.)
(நிலைமண்டில ஆசிரியப்பா)
அருள்:
தீர்ந்தது சூரரே! நுந்தோள் தினவு;
165 நேர்ந்தது வெம்போர்.
யாவரும்:
வாழ்கநம் வேந்தே!
முதற் படைஞன்:
யாவ:
நொந்தோம்; நொந்தோ மிதுகா றுறங்கி.
உய்ந்தோம்; உய்ந்தோம்; வாழுக உன்சொல்!
2-ம் படை: பெரும்போர் இலாநாள் பிறவா நாளே.
3-ம் படை:
4-ம் படை:
அருள்:
யாவ:
அருள்:
யாவ:
3-ம் படை:
முதற் படை:
மெய்யோ? பொய்யோ? ஐய! இதுவும்
170 யாவரோ, பகைவர்? அருளா பரணா! தேவரோ, அசுரரோ, மூவரோ, யாவர்?
பாண்டியன்.
(இகழ்ச்சியாய்)
பாண்டியன்! சீச்சீ! பகடி.
ஈண்டுவந் தவனவன் தூதன். யதார்த்தம்.... வியப்பு! வியப்பு!
வேற்றா ளொருவனென்
175 அயற்புறம் போனான். அவன்முகம் நோக்குழி வியர்த்தனன்; தூதுடை கண்டு விடுத்தேன். அவன்றான்! அவன்றான்! அவன்றான்! தூதன்.
4-ம் படை: யாதோ காரணம்? ஓதாய், தலைவா!
2-ம் படை: அப்பந் தின்னவோ? அலால்குழி எண்ணவோ?
பச்சாத்தாபம் - பரிதாபம். உய்ந்தோம் - பிழைத்தோம். மூவர் - மும் மூர்த்திகள். பகடி - கேலி. யதார்த்தம் - உள்ளபடி, மலையாள நாட்டு வழக்கு.