274
முரு:
சேவ:
ஜீவ:
குடி:
ஜீவ:
குடி:
மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக்களஞ்சியம் - 20
ஆயிற் கழுபதி னாயிரம் வேண்டும்.
(வாயிற்சேவகன் வர)
150 சுந்தர முனிவர் வந்தனர் அவ்வறை. சிந்தனை விரைவிற் செய்தற் குளதாம். வந்ததெவ் வழியிவர்! வந்தனம் குடிலா! நடத்துதி அதற்குள் விதிப்படி விரைவில்.
மடத்தனத் தாலிவர் கெடுத்தெனைப் புகல்வர்; 155 விடுத்திட அருளாய்!
விடுகிலம்
ஆயின்,
ஜீவ:
அடுத்துநின் றிதுநீ நடத்தலே அழகாம்.
அடைத்திடு சிறையினில், அணைகுதும் நொடியில்.
(ஜீவகன் போக)
குடி:
(தன் சேவகனை நோக்கி)
சடையா! கொடுபோய் அடையாய் சிறையில்
(சடையன் அருகே செல்ல)
முரு:
அணுகலை! விலகிநில்! அறிவோம் வழியாம்.
(சடையன் பின்னும் நெருங்க)
160 வேணுமோ கோணவாய் விக்கா!
சடையன்:
கொக்கொக்!
முரு:
கூவலை! விடியுமின் கூவலை!
(விக்கி)
கழு பதினாயிரம் வேண்டும் - நாராயணனைக் கழுவிலேற்றினால் அவனுடன் கழுவேறுபவர் பதினாயிரம்பேர் உள்ளனர் என்பது கருத்து. சடையன் - இவன் குடிலனுடைய சேவகன். கொக்கொக் - சடையன் விக்கலினால் உண்டாகும் ஓசை.