உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பதிப்பு : மனோன்மணியம் - நாடகம்

45

மருள்தரு மதனன் வடிவே! மதனற்கு உருவிலை என்பர். ஓசையும் உருவும்! பாடிய பாட்டின் பயனென்! அஃதோ! நாடி அறிகுதும். நன்று நன்று.

(புருடோத்தமன் திரும்பிவர)

(குறள்வெண் செந்துறை தொடர்ச்சி)

புரு:

(பாட )

புலனாரக் காண்பதுவே

பொருளென்னும் போதமிலாப்

புன்மை யோர்க்கிங்

குலவாதென் உளநிறையும்

உனதுண்மை உணர்த்தும்வகை

உண்டே உண்டே.

பெத்தமனக் கற்பிதமே

பிறங்குநினை வெனப்பிதற்றும்

பேதை யோர்க்கோர்

யத்தனமற் றிருக்கவென்னுள் எழுமுனது நிலையுரைப்ப தென்னே யென்னே.

தேர்விடத்தென் உள்ளநிறை தெள்ளமுதே உன்னிலைமை தேரா திங்ஙன்

ஊர்விடுத்தும் போர்தொடுத்தும்

னையகல நினைத்ததுமென் ஊழே ஊழே.

மருள்தரு மயங்கச் செய்கிற. மதனன் - மன்மதன்.

-

309

4

LO

5

6

குறள்வெண் செந்துறை - 4. புலன் ஆர – (கண்ணாகிய) புலன் நுகரும்படி. போதம் இலா அறிவு இல்லாத.

5. பெத்தமனம் - அவத்தைகளால் கட்டுப்பட்ட மனம், கற்பிதம் இல்லாததை உண்டு எனக் கற்பிப்பது. பிறங்கும் விளங்கும். யத்தனம் அற்று முயற்சி இல்லாமல்.

இந்த ஆறு குறள்வெண் செந்துறைச் செய்யுட்களும் (6

ஆவது

செய்யளின் கடைசி அடியைத் தவிர) ஞானசமாதியில் தெரிகிற பிரமானுபூதிக்கும், புருடோத்தமன் கனவில் கண்ட மனோன்மணி யின் காதல் வடிவத்திற்கும் பொருந்தியிருப்பது காண்க.