உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மயிலை சீனி. வேங்கடசாமி ஆய்வுக் களஞ்சியம் 20.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூன்றாம் களம்

இடம் : அரண்மனையில் மணமண்டபம்.

காலம் : நடுநிசி.

(அமைச்சர் படைவீரர் முதலியோர் அரசனை எதிர்பார்த்து நிற்க) (நிலைமண்டில ஆசிரியப்பா)

முதற்படைத் தலைவன்:

அடிகள்பின் போயினர் யாவர்? அறிவீர்.

2-ம் படை: நடரா சனைநீர் அறியீர் போலும்!

முதற்படை:

3-ம் படை:

முதற்படை:

3-ம் படை:

முதற்படை:

3-ம் படை:

LO

5

10

அறிவேன். ஆ! ஆ! அரிவையர் யாரே

வெறிகொளார் காணில்! வீணில் வாணியைக்

கெடுத்தான் கிழவன்.

அடுத்ததம் மணமும்!

தெரியீர் போலும்!

தெரியேன், செய்தியென்?

கோணிலா நாரணன் கொடுஞ்சிறை தவிர்த்தலும். வாணியின் மனப்படி மன்றல் நடத்தலும் இவ்வரம் இரண்டும் அம்மணி வேண்ட அளித்தனன் அனுமதி களிப்புடன் அரசன்.

இருதிரை இட்டவா றிப்போ தறிந்தேன். ஒருதிரை வாணிக்கு ஒருதிரை மணிக்கே.

எத்திரை தாய்க்கென் றியம்புதி. கேட்போம்.

கோண்இலா மனோன்மணி.

கோணல் இல்லாத, நேர்மை உடைய. அம்மணி