உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நற்றிணை தெளிவுரை

119


கருத்து: ஆதலின் தேரினை விரையச் என்பதாம்.


செலுத்துக

சொற்பொருள்: கொவீஇ - கொன்று. நுணல்.தவளை. தொடை- தொடுத்த மூட்டை. இருமடைக்கள் - பெரிய மடுத்துச் செய்யப் பெற்ற கள். கொள்கை - கோட்பாடு. பொறை பொறுத்துப் பிரிவாற்றியிருக்கும் தன்மை.

விளக்கம் : பொறை தலைமணந்தன்று: உயவுமார் இனியே' என்றது, தான் மீள்வதாகக் குறித்து வந்த நாளெல்லை அற்றைப் பொழுதோடும் கழிந்து போவதனைக் கருதிக் கூறியதாம். அதனால், அது வரை பிரிவைப் பொறுத்திருக்குமவள், அவ்வெல்லை

சுழியின் அவன் பொய்த்தனன் எனக் கருதித் துன்புறுவாள்' என்றான். பகற்போதில் காடெல்லாம் சுற்றியலைந்து வேட்டமாடி வரும் வேட்டுவன், மாலையிலே வீடு திரும்பியதும், அந்த முட்டையை மனைவியின் பொறுப்பிலே விட்டுவிட்டுத் தான் கள்ளயர்ந்து செருக்கிக் கிடக்கின்றான். 'அத்தகைய காட்டு நாட்டது. எனவே, தானும் கொணர்வ அனைத்தையும் தலைவியின் பொறுப்பிலே விட்டுவிட்டுக் களிப்பிலே திளைத்துக் கவலையின்றி வாழ்வான் என்பதாம். முல்லை நுண்முகை அவிழ்தல் காரின் தொடக்கத்தே ஆதலின்' அதுகண்டும். குறித்தபடி வருவேமென்ற நம்பிக்கையால் நம் வரவை எதிர்பார்த்துப் பொறுத் திருப்பாள்" என அவளது கற்புத் திண்மையையும் கூறுகின்றான்.

மேற்கோள்: முல்லைக்கு உரிய ஒழுக்கம் இரங்கலும் இரங்கல் நிமித்தமும் ஆம். அவள் பெரிதும் இரங்குவாளா யிருப்பாள் எனக் கூறாதே, 'வன்புலக் காட்டு நாட்டதுவே' என நிலத்தை உரைப்பதன் மூலம் ஒழுக்கத்தையும் பெற வைத்தனர் (தொல். பொருள், சூ 5. நச். உரை)

பிறபாடம்: உடும்பு கொரீஇ உடுப்பைக் குத்திப்பிடித்து.

60. சாயும் நெய்தலும்!

பாடியவர்: தூங்கலோரியார் திணை ; மருதம் துறை: சிறைப்புறமாக உழவற்குச் சொல்லுவாளாய்த் தோழி செறிப்பறிவுறீஇயது. சிறைப்புறமாக நிற்பதறிந்த தோழி. அவனுக்குத் தலைவியின் இற்செறிப்பினை

( (து - வி.) தலைவன்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/120&oldid=1627242" இலிருந்து மீள்விக்கப்பட்டது