உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

136

நற்றிணை தெளிவுரை


சொற்பொருள் : ஆயம் – ஆயமகளிர், ஓரை – ஒருவகை மகளிர் விளையாட்டு! பஞ்சாய்ப் பாவைகோண்டு நீரிடத்தே கூடியாடுவது. இளையோர் – இளையோராகிய மகளிர். ஆக்கம் – ஆகிவரும் செல்வம். எல் – ஒளி. உரவு – வலிமை. ஆடுமழை - பெய்யும் மழைமேகம்.

விளக்கம் : 'புதுநீராடிக் களிக்கும் பிற மகளிரைப் போலாது, அவன் மலையிடத்திலிருந்து வரும் நீராதலால் அதனையே கருதிப் பெரிதும் தாம் களிப்போம் என்பாள் 'அவர் குன்றிடத்திலிருந்து வரும் நீர்' என்றாள். 'செல்கென விடுநள் மன்' என ஐயுற்றதனால் இற்செறித்தல் நிகழும் என்பதனையும், இனிக் கண்டின்புறுதல் வாயாதென்பதனையும் கூறி வரைவு வேட்டனளும் ஆயிற்று. அரையிருள் நடுநாள் குன்றிடத்துப் பெய்யும் பெருமழையைச் சுட்டி, அதனைக் கடந்துவரும் தலைவனை நினைந்து வழியின் ஏதப்பாட்டிற்குத் தாம் அஞ்சினமையும் உணர்த்தினாள். 'சொல்லுநர்ப் பெறின்' என்றாள். தாம் அதுகாறும் மறைத்த களவினை.

மேற்கோள் : நச்சினார்க்கினியர், இச் செய்யுளை. 'வரைவு நீட ஆற்றாத தலைவி வேறுபாடு புறத்தார்க்குப் புலனாகாமையுைம் இயையும், இங்ஙனம் கூறுவாரைப் பெறின்' எனக் கூறித் தோழி வற்புறுத்ததாகக் காட்டுவர். (தொல். பொருள் சூ. 114 உரை.)

பிறபாடங்கள் : 'நறுமலர் அருந்தி', 'இலங்க மன்னி'.

69. மாலை தோன்றினால்!

பாடியவர் : சேகம் பூதனார்.
திணை : முல்லை.
துறை : வினைவயிற் பிரிதலாற்றாளாய தலைவி சொல்லியது.

[(து–வி.) வினைவயிற் பிரிந்து சென்ற கணவன் குறித்த பருவத்தே வாரானாதலை நினைத்து தலைவியின் பிரிவுத் துயரம் பெருகுகின்றது. அதனால் மிக வாடிய அவள், மாலையின் வரவைக் கண்டதும், தன்னுள் கூறிப் புலம்புவது இச் செய்யுள்.]

பல்கதிர் மண்டிலம் பகல்செய்து ஆற்றி
சேய்உயர் பெருவரைச் சென்றுஅவண் மறையப்
பறவை பார்ப்புவயின் அடையப் புறவில்
மாஎருத்து இரலை மடப்பிணை தழுவ
முல்லை முகைவாய் திறப்பப் பல்வயின் 5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/137&oldid=1678167" இலிருந்து மீள்விக்கப்பட்டது