உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

155


யாக கொல்லும் இயல்பினவான சுறாமீன்கள் திரிந்தபடியிருக்கும் ஒள்ளிய நிறத்தையுடைய கருங்கழியிடத்தே, நீலமணியின் அழகினைக் கொண்ட நெய்தலது சுருமலர்கள் நிறைந்திருக்கும். அம்மலர்கள் நிரம்புமாறு, பொன்னொத்த நுண்ணிய பூந்துகள்களைக் கரையிடத்திருக்கும் புன்னை மரங்கள் தூவிக் கொண்டிருக்கும். விழுதூன்றிய தாழையின் பூக்கள் மணம் கமழ்ந்தபடி விளங்கும் கடற்கரைச் சோலைபிடத்தே மென்மேலாகத் துன்பம் வந்து வருத்துகின்றதான ஞாயிறு சென்று மறையும் மாலைப் பொழுதிலே, காமநோய் மிகுதலாகிய பெருந்துன்பத்தினின்றும் நீங்கினமாய், நாம். இனி இவ்விடத்தே பிழைத்திருந்து வாழ்வோம்—காண்பாயாக!

கருத்து : 'தலைவனின் வரவினாலே இனி நின் பிரிவு நோயாகிய துன்பம் முற்றவும் தீரும்' என்பதாம்.

சொற்பொருள் : கோட்சுறா – கொல்லுதலில் வல்ல சுறாமீன். வழங்கும் – திரியும். வான் – ஒளி. கேழ் – நிறம். வீழ்தாழ் – விழுதுகள் தாழ்ந்த. வள் வாய் – வலிமை வாய்ந்த. புள்ளு நிமிர்ந்தன்ன - பறவை மேலெழுந்து பறத்தலைப்போல பொலம்படை – பொற்படை; குதிரைக்கு அணியும் கண்டையும் பிறவும். கலிமா – செருக்குள்ள குதிரை. கோல் – தாற்றுக்கோல்.

விளக்கம் : 'மாலைப்பொழுதிலே தலைவனது வரவை எதிர்நோக்கியபடி கானற்சோலையிலே காத்திருந்து தளரும் பெருந்துயரம் இனித் தீர்ந்தது; அவன் அதோ வரைவொடு வந்தனன்' என்கின்றாள். 'வள்வாய் ஆழி உள்வாய் தோயினும் புள்ளு நிமிர்ந்தன்ன பொலம்படைக் கலிமா' என்றது. 'தேரின் இயக்கத்தைத் தடுக்கும் தடை உண்டாயினும், அதனையும் பொருட்டாக்காது தம் வலிமையால் நீங்கிப் பறந்து வந்து சேரும் செருக்குடைய குதிரைகள்' என்றதாம். இவ்வாறே தலைவனும் வரைதற்கு இடையிட்ட இடுக்கண்களை எல்லாம் ஒதுக்கிக் குறித்தபடியே வந்து சேரும் தகைமையாளன் ஆயினான் என்றதும் ஆம்.

'வள்வாய் ஆழி உள்வாய் தோயினும்' என்று கூறுவன, அவனைக் கொணர்ந்துதந்த தேரினை வலித்துவந்த குதிரைகளின் உதவிச்செயலை வியந்து போற்றியபடியும் ஆம்.

இறைச்சிகள் : கழியிடத்து நெய்தல் மலரிடைக் கரைக்கண் நின்ற புன்னை பொன்னிறத் தாதினைச் சொரிந்தாற்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/156&oldid=1679092" இலிருந்து மீள்விக்கப்பட்டது