உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

168

நற்றிணை தெளிவுரை


'களர் நிலம் உப்புப் பொரிந்து காணப்படுதற்குச் 'சுடுமண் தசும்பின் மத்தம் தின்ற பிறவா வெண்ணெய் உருப்பு இடந்தன்ன உவர் எழு களரி' என்ற உவமை, நயமுடையதாகும்.

உள்ளுறை : 'பேய்த் தேரை நீரென நசைஇச் சென்று வருந்தும் மானைப்போல, என்பால் அன்பற்றவராயினாரை அன்புடையாரென எண்ணி அடைந்து யானும் ஏமாற்றமுற்று வாட்டம் அடைகின்றேன்' என்பதாம். 'பேய்த்தேர்' தலைவனது அன்பிற்கும், 'நசைஇச் செல்லும் மான்' தலைவிக்கும் பொருத்திக் காணற்கு உரியவாம். அகலத்தோன்றும் பேய்த்தேரை நீரென மயங்கித் தொடர்ந்து போகும் மானைப்போல, நிலையாமை கொண்ட பொருளை நிலையுள்ளதென மயங்கினராய்த் தலைவரும் தேடிச் செல்வாராயினர்" என்பதும் பொருந்துவதாம்.

85. நின் நசையினான்!

பாடியவர் : நல்விளக்கனார்.
திணை : குறிஞ்சி.
துறை : தலைவன் வரவுணர்ந்த தோழி தலைவிக்கு உரைத்தது.

[(து–வி ) இரவுக் குறிக்கண் தலைவனின் வரவினை அறிந்தனள் தோழி; தலைவனைத் தலைவியை வரைந்து மணந்து கொள்ளுதற்குத் தூண்டக் கருதினள்; தலைவிக்குச் சொல்வாள் போலத் தலைவனும் கேட்டுணருமாறு இப்படிக் கூறுகின்றனள்.]

ஆய்மலர் மழைக்கண் தெண்பனி உறைப்பவும்
வேய்மருள் பணைத்தோள் விறல்இழை நெகிழவும்,
அம்பல் மூதூர் அரவம் ஆயினும்,
குறுவரி இரும்புலி அஞ்சிக் குறுநடைக்
கன்றுடை வேழம் நின்றுகாத்து அல்கும், 5
ஆர்இருள் கடுகிய அஞ்சுவரு சிறுநெறி
வாரற்க தில்ல—தோழி—சாரல்
கானவன் எய்த முளவுமான் கொழுங்குறை
தேம்கமழ் கதுப்பின் கொடிச்சி கிழங்கொடு
காந்தன்அம் சிறுகுடிப் பகுக்கும்
ஓங்குமலை நாடன் நின் நசையி னானே! 10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/169&oldid=1681287" இலிருந்து மீள்விக்கப்பட்டது