<@> செந்தமிழ் வள்ளல் சீதக்காதி י saavana பகுதி கொண்டாச்சியில் தங்கி அக்கிரமமாக குடியிருந்து வருவதாகவும், அவர்கள் சேது நாட்டுக் குடிமக்களாக இருப்பதால் அவர்களின் இந்த சட்ட விரோதச் செயலைத் தடுப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென யாழ்ப்பானத்திலிருந்த டச்சுக் கிழக்கிந்தியக் கர்பெனியினர் சேதுபதிமன்னருக்கு புகார் செய்தனர். இதனை நேரில் சென்று விசாரிப்பதற்காக மன்னரது பிரதிநிதியாக சிதக்காதி மரைக்காயர் செல்ல வேண்டிய நிர்ப்பந்தம். இத்தகைய சூழநிலையில் சீதக்காதி மரைக்காயர் ஒவ்வொரு மாதமும் தொடர்ந்து சில நாட்கள் இராமநாதபுரத்தில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. பெரும்பாலுமர் மாலை நேரங்களில் அரண்மனைக்குச் சென்று சேதுபதி மன்னரைச் சந்தித்து அளவளாவதையும் சேதுநாட்டு பிரச்சினைகளுக்கு தீர்வுகாண தக்க ஆலோசனைகள் வழங்குதலையும் வழக்கமாகக் கொண்டிருந்தா. சில சமயங்களில் சேதுபதி மன்னரை தரிசித்து கொடைகள் பெற்றுச் செல்வதற்கு வருகின்ற தமிழ்ப்புலவர் பெருமக்களை சீதக்காதி மரைக்காயருக்கு மன்னர் அறிமுகம் செப்து வைப் பார். தமிழ ஆர்வலரான மரைக்காயர் அவர்களும் புலவர்களுடன் இலக்கிய சர்ச்சைகளில் ஈடுபட்டு மனமகிழ்வார். மற்றும் ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் வந்துவிட்டால் இராமநாதபுரம் கோட்டை மிகவும் கலகலப் பாக தோற்றமளிக்கும். தமிழ்நாட்டின் நெடுந்துரத்திலுள்ள பட்டி தொட்டிகளிலிருந்து கூட தமிழ்ப்புலவர்கள் இராமநாதபுரம் அரண்மனை நோக்கி வருவார்கள். தொடர்ந்து ஒன்பது நாட்கள் நடைபெறு மச் நவராத்திரி விழாவில் தங்களது தமிழிப் புலமை யை யு ர், துண் மான்துழை புலத்தை 4 ம் தெரிவிக்கும் பாங்காக பல தமிழக்கவிதைகளை இயற்றி சேதுபதி அரசர் முன்னர் அரங்கேற்றுவர். கவிதைகளின் தரத்தை ஒர்ந்த சேதுபதி மன்னரும் அந்தப் புலவருக்கு ار حا