உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/314

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நற்றிணை தெளிவுரை

313


இறைச்சி : 'கோடை தூக்குதொறும் இற்றியின் விழுது மரத்தடியிலே தூங்கும் பிடியினை வருடிவிடுதலைப் போன்று பிரிவுத் துயராலே தவைவி நலியுந்தொறும் அதனைத் தோழி ஆற்றுவித்துத் துயரைத் தெளிவிப்பாள்' என்பதாம்.

163. களைப்பாறுக!

பாடியவர் : ......
திணை : நெய்தல்.
துறை : வரைவு மலிந்து சொல்லியது.

[(து–வி.) தலைவன் வரைவொடு வந்தனன். அதனைக் கண்ட மகிழ்ச்சியினாலே, தோழி தலைவிபாற் சென்று கூறுவதாக அமைந்த செய்யுள் இது.]

உயிர்த்தன வாகுக அளிய நாளும்
அயிர்த்துகள் முகந்த ஆனா ஊதையொடு
எல்லியும் இரவும் என்னாது கல்லெனக்
கறங்கிசை இனமணி கைபுணர்ந்து ஒலிப்ப
நிலவுத்தவழ் மணற்கோடு ஏறிச் செலவர
இன்றென் நெஞ்சம் போலத் தொன்றுநனி 5
வருந்துமன் அளிய தாமே பெருங்கடல்
நீல்நிறப் புன்னைத் தமியொண் கைதை
வானம் மூழ்கிய வயங்குஒளி நெடுஞ்சுடர்க்
கதிர்காய்ந்து எழுந்துஅகம் கனலி ஞாயிற்று 10
வைகுறு வனப்பின் தோன்றும்
கைதைஅம் கானல் துறைவன் மாவே!

பெருங்கடலின் அருகேயுள்ள ஒரு கருநிறப் புன்னை; அம் மரத்தினது பக்கத்திலே தனித்திருக்கும் தாழையின் ஒள்ளிய மடல்; அம் மடலானது, ஒளிவிளங்கும் நெடிய சுடர்களைக் கொண்ட கதிர்களைக் காய்ந்தபடியே வானத்தே மூழ்கிக்கிடந்த இருளினது செறிவைக்கண்டு, உள்ளே கொதித்து விடியற்காலை வேளையிலே அதனைப் போக்குவதற்கு எழுகின்ற வைகறைப் போதின் வனப்பினோடும் கலந்து தோன்றும். அத்தகைய தாழைகளையுடைய கானற்சோலைக்கு உரிய துறைவன் நம் தலைவன் அவனுடைய தேர்க்குதிரைகள் தாம்—


ந.—20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/314&oldid=1696080" இலிருந்து மீள்விக்கப்பட்டது