உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நற்றிணை 1.pdf/315

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

314

நற்றிணை தெளிவுரை


நுண் மணலாகிய துகளை முகந்து எழுந்த அமையாத வாடைக்காற்றோடு, இரவும் பகலும் என்று கருதாமல், கல்லென்று ஒலிக்கும் இசையமைதியை உடைய மணி இனங்களை ஒருசேரக் கோத்து அணியப்பெற்ற மணிமாலையானது ஒலிசெய்ய, நிலவின் ஒளிதவழ்ந்தபடியே யிருக்கின்ற மணல் மேட்டினிடந்தே ஏறிச் செல்லுதலானே, இன்று களிப்புறும் என் நெஞ்சத்தைப்போல, முன்பாக மிகவும் வருத்தமுறும் போலும்! ஆதலின் இரங்கத்தளவாய அவைதாம் இப்போது களைப்பாறுவன வாகுக!

கருத்து : தலைவன் வரைவொடு வந்தனனாதலின், என் மனந்தானும் களிப்புற்றது' என்பதாம்; நீயும் நின் அழிதுயர் நீங்கினையாய்க் களிப்புறுக' என்பதுமாம்.

சொற்பொருள் : உயிர்த்தன ஆகுக – களைப்பாறுவன ஆகுக. அயிர்த்துகள் – நுண் மணலாகிய துகள். ஊதை – வாடைக் காற்று. மணற்கோடு – மணற்குன்றம். கைதை – தாழை. வைகுறு – விடியல்.

விளக்கம் : 'வாடைக் காற்றோடு சேர்ந்து மணியும் ஒலிப்ப' என்றது, வாடையால் நலியும் உள்ளத்திற்கு மணியொலியானது ஆறுதலைத் தரும் என்பதாம். இரவுநேரத்திலே ஒலிசெய்தபடி வரும் தேர்க் குதிரைகளின் ஆரவாரத்தால், தலைவன் வரைவொடு வந்தமையைத் தோழி அறிந்தாள் என்க. களவினை வேட்டு வருவதாயின், மணியொலியால் எழும் ஊரலர்க்கு அஞ்சினனாய, அதனை ஏழாதபடி அவித்திருப்பன் என்று கொள்க. இருட்செறிவை நீக்கக் கருதிக் கனன்று எழுகின்ற ஞாயிறுபோலத் தம்மைச் சூழ்ந்திருந்த பெரும்படராகிய இருளை அகற்றும் கதிரவனாகத் தலைவனும் விடியற்காலை வேளையில் வந்தனன் என்று கொள்க.

இறைச்சி : 'புன்னையும் தாழையும் ஒன்றியிருக்கும் துறைவன்' என்றது, அவ்வாறே அவன் தலைவியையும் மணந்து கூடி மணம் பெறுவான்' என்பதாம்.

164. தெளிதல் செல்லாய்!

பாடியவர் : ......
திணை : பாலை.
துறை : பொருள் முடித்து வந்தானென்பது வாயில்கள் வாய்க்கேட்ட தோழி, தலைவிக்கு உரைத்தது.
"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நற்றிணை_1.pdf/315&oldid=1696083" இலிருந்து மீள்விக்கப்பட்டது