நற்றிணை தெளிவுரை
261
என்பது விளங்கும், தினை கவரும் கிளியை ஓட்டுதற்குச் செல்க என ஏவியதனால்.
135. சீறூர் இனிது!
- பாடியவர் : கதப்பிள்ளையார்.
- திணை : நெய்தல்.
- துறை : 'வரைவு நீட்டிப்ப அவர் ஆம்' எனக் கவன்ற தோழி சிறைப்புறமாகச் சொல்லியது.
[(து–வி.) 'வரைந்து வருவதாகத் தலைவன் குறித்துச் சென்ற காலம் நீட்டிப்பதாயிற்று. ஊரார் பழிதூற்று வரோ?' என்று அஞ்சுகின்றாள் தோழி. தலைவன் குறியிடத்து ஒருசார்வந்து செவ்விநோக்கி ஒதுங்கி நிற்கின்றான். தம் நிலையை அவன் அறியுமாறு உணர்த்தக் கருதியவளாக அவள் இப்படிச் சொல்லுகின்றாள்.]
தூங்கல் ஓலை ஓங்குமடற் பெண்ணை
மாஅரை புதைத்த மணல்வலி முன்றில்,
வரையாத் தாரம் வருவிருந்து அயரும்
தண்குடி தாழ்நர் அம்குடிச் சீறூர்
இனிதுமன் றம்ம தானே; பனிபடு
5
பல்சுரம் உழந்த நல்கூர் பரிய
முழங்குதிரைப் புதுமணல் அழுந்தக் கொட்கும்
வால்உளைப் பொலிந்த புரவித்
தேரோர் நம்மொடு நகாஅ ஊங்கே.
தொங்குகின்ற ஓலைகளையும் நீண்ட மடல்களையும் உடையது பனை. அதன் கரிய அடிமரம் புதையுமாறு மூடிக்கிடக்கும் மணல்மிகுந்தது வீட்டின் முற்றம். அளவுபடாத உணவுப் பொருள்களை இல்லிடத்தே வரும் விருந்தினர்கட்குப் பகுத்தளித்து வாழும் தண்ணிய குடிவாழ்க்கை உடையவர் நம் ஊரவர். அழகிய குடிகளையுடைய அச்சீறூரது வாழ்வும், முன்னர் நமக்கு இனிதாகவே இருந்தது.
குளிர்ச்சி பொருந்திய பலவாய கடத்தற்கரிய சுரநெறிகளில், வருத்தத்தோடு வருதலாலுண்டாகிய குறைந்த செலவினை உடையவாய் முழங்கும் அலைகள் கொணர்ந்து கொழிக்கும் புதுமணலிற் சக்கரங்கள் அழுந்துதலினாலே மேலும் மனஞ்சுழலும் வெள்ளிய பிடரிமயிரால் அழகுற்ற குதிரைகளை பூட்டிய தேரினரான நம் காதலர், நம்மோடு