நற்றிணை தெளிவுரை
387
கருத்து : 'என் மகளைக் காணாது அலமரும் எனக்கு அவளது பேச்சினை நீவிர் சொல்வீராக; சொன்னால் நும்பெயர் புகழ்பெறும்' என்பதாம்.
சொற்பொருள் : சேயின் – தொலைவிடத்திருந்து, மதவலி – பெருவலிமை. யா – யாமரம் ஒமை – ஓமை மாம். தந்தை தன் ஊர் (முன்னது) இல்லம்; (பின்னது) ஊர். கோடு – வரை, தார் – மாலை.
விளக்கம் : 'மதவலி' எனச் சிறப்பித்துக் கூறிய செவ்வியினால். எதிர்வந்தவன் ஓர் தலைவன் எனக் கொள்ளலும் பொருத்தம் உடையதாகும். தன் மகளது பிரிவாற்றாமையினாலே வருந்தும் தாய், அவளை எதிரே கண்டு வருவாரது வாய்ச் சொற்களைக் கேட்டு மனவமைதி பெறுவதற்கு முயலுகின்றாள். வயதிற் சிறியராயினும் 'தொழுவேன்' என்றது, அவர் வாய்மொழியாலே பெறும் மனவமைதி பெரிதாதலான். 'அணல்' என்பது மோவாயிடத்தே விளங்கும் மயிர்; தாடியும் ஆம். எய்யா வண்மகிழ் – குறைதலற்ற வளவிய மகிழ்ச்சிப் பெருக்கம்: இது கள்ளூணால் வந்தடைவது 'ஈன்றேன் யானே' என்றது, பிறருக்காயின் அவர்தாம் கண்டாரைப்பற்றி யாதும் கூறார் ஆதலினால், பெற்ற தாயாகத் தன்னைப் படைத்துக் கூறியதும் ஆம்.
199. உள்ளுடைந்து உளேன்!
- பாடியவர் : பேரிசாத்தனார்.
- திணை : நெய்தல்.
- துறை : வன்பொறை எதிரழிந்தது.
[(து–வி) தலைமகனின் பிரிவினாலே வருத்தம் மிகுதியாக, அதனால் நலிவுற்றிருந்தாள் தலைவி. அவனைக் காணப் பொறுக்காத தோழி துயரத்தை ஆற்றியிருக்குமாறு வற்புறுத்திக் கூறித் தலைவியைத் தேற்ற முயல்கின்றாள். அவளுக்குத் தலைவி சொல்வதாக அமைந்த செய்யுள் இதுவாகும்.]
ஓங்குமணல் உடுத்த நெடுமாப் பெண்ணை
வீங்குமடல் குடம்பைப் பைதல் வெண்குருகு
நள்ளென் யாமத்து உயவுதோறு உருகி
அள்ளல் அன்னவென் உள்ளமொடு உள்ளுடைந்து
உளெனே வாழி தோழி! வளைநீர்க்
5