உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பொன் விலங்கு, அண்ணாதுரை.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சி.என். துரை செய்ய ஆற்றல் இருக்கிறது அமைச்சர்களுக்கு, ஆனால் சிறுபான்மைச் சமூகத்திலே சிலர் எதிர்த்து வேலை செய் யும்போது அமைச்சர்கள் "மூன்றாம் பேஸ்துகள் ஆக வேண்டியல்லவா நேரிடுகிறது? அமைச்சர்களை இந்தக் கோலத்திலா காணவேண்டும் ? பட்டம் இருக்கிறது அமைச்சர் என்று, ஆனால் கம்யூனல் திட்டத்தைக் காப் பாற்றும் ஆற்றலைக் காணோம் -- என்று கலக்கக் குரலில் பலர் பேசுகின்றனர். சீறிடும் தேசியச் சிங்கங்கள், இந்த வர்ணாஸ்ரமத் தாக்குதலைக்கண்டு, எலியானார்,முயலானாரே!-என்று ஏளனமாகப் பேசுபவரும் உளர். இந்த வகையான பேச்சு இனி, மேலும் மேலும் வளரும். அமைச்சர்கள், சட்டசபையிலேயும் வெளியிலேயும், இந்தக் கம்யூனல் ஜி.ஒ.வைப் பலமாக ஆதரித்துள்ள னர்_எனவே, அந்தத் திட்டம் அழியாதபடி பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அவர்களைச் சார்ந்தது. அந்தப் பொறுப்பை மறப்பது, பண்பாகாது தட்டிக் கழித்துவிட முயல்வது ஆண்மையாகாது-நாம் என்ன செய்வது என்று பேசுவது அறிவுடைமையாகாது. உள்ள உறுதியுடன், அமைச்சர்கள், இந்த நிலைமையை மாற்றி அமைக்க வழிவகை கண்டாக வேண்டும். இப் போதாகிலும். இடிமேல் இடிபட்ட பிறகாவது, யார் வகுப்புவாதிகள், எது வகுப்புவாதம், என்று நாட்டு

15.


15