உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

மருமக்கள்வழி மான்மியம்

தன் மகனைச் சொன்னபோது அவன் தன்னால் முடியாதென்று தமிழை இகழ்ந்து சொன்னது இப்பெண்மணியின் நெஞ்சைப் பிளந்து விட்டது. கணவர் முடிவு வந்தது;

ஏங்கி அழுத எங்களை நோக்கினர்;
வாடி அழுத மக்களை நோக்கினர்;
கடவுளை எண்ணிக் கையை எடுத்தனர்;
கண்ணை மூடினர், கயிலைபோய்ச் சேர்ந்தனர்.

கதாநாயகியின் துக்கம் நிரம்பிவிட்டது. அவள் கண்களிலும் இதயத்திலும் உதிரங் கொட்டுகிறது; அவள்வயிறு எரிகிறது. அனற்பிழம்பு பெருக்கெடுத் தோடுவதுபோல அவள் சொற்கள் புறப்படுகின்றன; மருமக்கள் வழி,

மனிதரைப் பேயாய் மாற்றும் பாழ்வழி
.........
நடைப்பிணம் ஆயிரம் நடக்கும் வனவழி:
வெவ்வழி, சற்றும் வெளிச்ச மிலாவழி;
இருள்வழி, செல்பவர் இடறும் கல்வழி;
.........
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வமென்று
அவ்வை சொல்மொழி அறியா மடவழி.
ஐயோ, இவ்வழி ஆகாது, ஆகாது;
ஆடுகள் மாடுகட்கு ஆகும் இவ்வழி
மனிதர் செல்லும் வழியாயிடுமோ?
.........
சுற்றவர் உளரோ! கற்றவர் உளரோ!
பெற்ற மக்களைப் பேணி வளர்த்திடாக்
கற்றவர் உளரோ? கற்றவர் உளரோ!

அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!
வறுமைக்கு இரையாய் மக்களை விட்டிடும்
அறிஞரும் உளரோ! அறிஞரும் உளரோ!

நீதியும் உளதோ! நீதியும் உளதோ!
மாதர் கண்ணீர் மாறா நிலத்தில்
நீதியும் உளதோ! நீதியும் உளதோ!