உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மருமக்கள்வழி மான்மியம்.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

82

மருமக்கள்வழி மான்மியம்

நடப்பவர் உன்போல் நானிலத் தில்லை?
ஆனால்,
மருமகன் வந்து வணங்கி நின்று
வாழ்த்த எண்ணி வாயைத் திறக்குமுன்,
வைதான் என்று பொய்தான் சொல்வாய்! 60
அடியேன் என்று அவன் அங்கை கூப்பினும்,
அடித்தான் என்று அநியாயமே கூறுவாய்,
காரண வா! உன் காரிய மெல்லாம்
அற்புதம்! அற்புதம்! அற்புதம்! அப்பா!
ஒருகண் வெண்ணெயும் ஒருகண் நீறும் 65
வைப்பதும் உனக்கு வழக்கம் தான். அடா!
இதற்குச் சாத்திரம் எங்கே பார்த்து
வைத்திருக் கின்றீர், மாப்பிள்ளைத் துரையே!
போட்டும்;[1]
ஆண்டு தோறும் அறுப்புக் காலம்உன் 70
நாலாம் மனைவி நாடகக் காரி,
வித்துத் தண்டும் வாளை மீனும்
முருங்கைக் காயும் மொச்சைக் கொட்டையும்
வட்டி வட்டியாய் வாங்கி வாங்கிக்
கறிகள் வைத்துக் கஞ்சியும் வைத்து, 75
கஞ்சியை
ஆற்றி ஆற்றி அரையரை அகப்பையாய்
விட்டுக் கொண்டு, விசிறி எடுத்து
வியர்வை மாற வீசிக் கொண்டு,
பற்பல பேச்சிலும் பக்குவ மாக 80


  1. 69. போட்டும் - போகட்டும்; இது நிற்க.