உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/231

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232

காவடி மோடி சூலம் வீதியில் புரள்வது வேல்குத்தி ஆடுவது 282 மொட்டை அடித்துக்கொள்வது கண்ட குட்டையில் புரள்வது! இவை போன் றவைகள்! சத்யம் சன்மார்க்கம் அழகு லெனின் கிராடிலே இது பேச்சு, வெண் பொங்கல் புளியோதரை தயிரன்னம் அக்கார வடிசல் ஆரியருக்கு மானியம் விடுவது காணிக்கை கொடுப்பது திராவிடர் செய்யும் திருப்பணி ! கேள்விகள் கேட்டனர் என்கிறார் - பதிலும் அளித் தாராம், சொல்கிறார். தம்பி, அங்கு என்னென்ன கேள்விகள் கேட்டார்கள் என்பதை அவன் கூறவில்லை. போகட்டும். இங்கு, நீயோ நானோ கேட்கும் கேள்விகளுக்கு இவரும் இவரைப் போன்றா ரும் பதில் கூறுவாரா, சபிப்பர். கேட்க வேண்டியது ஒன்றா இரண்டா, ஓராயிரம் உண்டே, எதற்குத்தான் பதிலளிக்க முடியும். இங்கே உள்ள குப்பை கூளத்தைக் கூட்டிச் சுத்தம்செய்ய முடியவில்லை, அங்கே போனாராம், அற்புதமாகப் பேசினாராம், வெற்றி பெற்றாராம். பளா, பளா, அடுக்களை நாற்றத்தைக் கழுவாமல் அத்தர் வியாபாரம் செய்யப் போனது போலல் லவா இருக்கிறது. 16-10-1955 அன்புள்ள, Jimmy m