உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:குழந்தை செல்வம்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

குழந்தைச் செல்வம்


மாணிக்க மூக்கழகும் - மரகத
      வர்ண வடிவழகும்
காணக்கண் ணாயிரந்தான் - இருப்பினும்,
      கண்டு முடிந்திடுமோ? 6

கத்திரி போலவெட்டிக் - கனியினைக்
      கௌவி யெடுத்தோடச்
சித்திர வாயளித்த - கடவுள்
      திருவருள் சற்றோ? அம்மா! 7

சாய்ந்து தலைவணங்கி - இனிய
      தமிழைநீ கற்குமுறை,
ஆய்ந்த புலவருமே -எழுதி
      அயர்ந்துகை சோர்வார், அம்மா! 8

பறக்கச் சிறகிருந்தும் - மரக்கிளை
      பற்றிநீ ஏறுவதேன்?
திறத்தை உலகினுக்கு - மிகவும்
      தெரிவிக்கவோ? கிளியே! 9

காட்டுத் தினைக்கதிரை - பறித்து நீ
       கண்டித் தருந்தாமல்,
கூட்டுக் கெடுத்தோடும் - குறிப்பெது
       கூறுவையோ? கிளியே! 10

ஒற்றை யொருகாலில் - நின்றுகனி
       உண்ணும் அறியவித்தை
கற்றதும் யாவரிடம் - அவரை நீ
       காட்டுவையோ? கிளியே! 11