இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
30
குழந்தைச் செல்வம்
திருத்தமுறச் சுடரொளிதான் முகத்தில் வீசத்
திரண்டுபுயல் பின்வர, மாலுமியும் நின்றான்;
கருத்தொடெதைப் பாடுவன்யான், களிப்பி லொன்றாய்க்
கண்ணீரும் புன்னகையும் கலந்தது அம்மா!
3
உள்ளமதை ஆகாயம் பரவ விட்டேன்;
உன்கரமும் என்கனவில் தீண்டப் பெற்றேன்;
மெள்ள உன்றன் முகமறைக்கும் திரையை நீக்கி,
விழிகளையான் கண்டுதொழக் கருணை செய்வாய்!
கள்ளவிழும் வனத்திலெழும் இசையூ டெம்மைக்
களிப்பொடு வரவேற்கும் குறிப்பைக் கண்டேன்;
வள்ளலுன்றன் திருக்கழலின் ஒளிஎன் னுள்ளம்
மலியநிறைந் தானந்தம் அளிக்கு தையா!
4