உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

130 இரத்தக் கண்ணீர் படுகின்றனர். முத்தாயியை தன்னுடைய தலைவனின் பள்ளியறை விருந்தாகக் கொண்டு போகிறோம் என்பது அந்த அப்பாவிகளின் நினைப்பு. ஆண் உடையிலே இருக்கும் முத்தாயி, ஆற்றங்கரை யோரத்திலேவந்து தன்காதலனைத் தேடுகிறாள். ஒரு புதரிலிருந்து முத்தன் புறப்பட்டு அவளிடம் வருகிறான். முத்தன் : முத்தாயி! முத்தாயி: அத்தான்

அருமையாக அமைந்து விட்டது நாடகம்? இனி அடுத்தது என்ன? முத்தன்: முத்தத்திற்குப் பிறகே முழுதும் சொல்லப் படும். அதோ பார் - நிலவும் மேகமும் தழுவிக் கொள்வதை! இருவரும் வானத்தைப் பார்க்கிறார்கள் முகிலும் நிலவும் முத்தமிடுகின்றன.