உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இரத்தக் கண்ணீர்.pdf/114

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மு. கருணாநிதி 113 உன் எனக்கு அன்பு ஏற்பட்டது. உனது காதலி உதவியை எதிர்பார்த்து ஊசலாடிக் கொண்டிருக் கிறாள். நீ உடனே போக வேண்டும் அவளைக் காப் பாற்ற வேண்டும். முத்தன்: உண்மையாகவா? வெற்றிவேலன்: ஆமாம். ஆனந்தபுரம் கண்ணாடி மாளிகையிலே திருமணம்! அவள் ஆவி பிரிவதற்கு முன் நீ ஓடு ! முத்தா ! ஒன்று சொல்லுகிறேன்.நீயும் முத்தாயியும் என் பாதுகாப்பில் இந்த ஊரிலேயே குடும்பம் நடத்தலாம்!- அதற்கென்ன இப்போது அவசரம் - உடனே போ! உன் உயிரனையாளைக் காப்பாற்று!-- உங்களின் உண்மைக் காதல் என்னால் உதிர்ந்து போவானேன்? முத்தன்: மிகவும் நன்றியுடையவன் அய்யா நான்! மலர் வெற்றிவேலன் : இளைஞனே ! இப்போதே ஓடு ! இழந்த காதலைப் பெற்றிடு! முத்தன் வணங்கிவிட்டு அறையை விட்டு வெளியேறுகிறான். அவனுக்கு ஒரே குழப்பம். அதற்குள் தளபதியின் அறையில் ஒரு சிரிப்பு சப்தம் கேட்கிறது. முத்தன், ஒளிந்து நின்று கவனிக்கிறான். உள்ளே தளபதியும், வேதாள மும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். வேதானம்: சபாஷ் பிரபுவே! மிகவும் நன்றாக நடித்து விட்டீர்கள். வெற்றிவேலன்: சரியானபடி ஏமாந்து விட்டான் பயல்! வேதாளம்! அடுத்த ஏற்பாடு என்ன?