உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:ஆறுமாதக் கடுங்காவல்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆறுமாதக் கடுங்காவல் 217 முன்னால் பார்த்துவிட்டுப்போன எங்கள் அழகுத் திரு நாட்டை, விசாலமாக விழித்துப்பார்த்தோம். ஆயிர மாயிரம் திராவிடத் தோழர்கள் - அவர்களின் ஒளி பொருந்திய கண்கள், எங்களை ஆரத்தழுவி வரவேற்றன. பொறுப்பாளர் கோவிந்தசாமி மத்திய கழகத்தின் சார்பாக வரவேற்றார். திருச்சி மாவட்ட செயலாளர் அம்பில் தர்ம லிங்கம், தஞ்சை மாவட்ட செயலாளர் K.K.நீலமேகம், சென்னை மாவட்ட செயலாளர் கண்ணபிரான், மதுரை மாவட்ட செயலாளர் தொந்தி, மற்றும் மாவட்டத்து செயல் வீரர்கள் அனைவரும் வந்திருந்து வரவேற்றனர். கலையுலக ஜோதி கலைவாணர் கிருஷ்ணன் எதிர் கொண் டழைத்தார். என் அனைவரும் " அ ன் க் 4 கு ரியோர் · அருமை திராவிடத்தின் பெருமைகாக்கும் படைவீரர் வருக வருக? என வாழ்த்தினர். சிறிய சிறையிலிருந்து பெரிய சிறைக்கு என்று கூறியபடி அவர்களைத் தழுவிக்கொண்டேன். 66 வந்தேன் நவம்பர் 21ந் தேதி காலை பத்துமணியுடன் எனக்கு விதிக்கப்பட்ட ஆறுமாதக் கடுங்காவல் முடிவுற்றது. ஆனால் என் அன்னை திராவிடத்தைப் பூட்டிவைத்திருக் கும் அடிமைச் சங்கிலி அறுபடுவது எந்நாள்?