இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
கடிதம் 63 இதுபோன்ற இயற்கை விளைவிக்கும் தொல்லைகளுக் கெல்லாம் எந்த ஒரு அரசும் பொறுப்பாளியாக முடியாது! தங்கள் கட்சியை வளர்ப்பதற்காக வேண்டுமானால்; 6 6 "ஆகா! பார்! பார்!! மின்வெட்டு வந்துவிட்டது! என்று ஊரறிய உரக்கக் கூவி அதிலே ஏதாவது அரசியல் லாபம் கிடைக்கிறதா என்று பார்க்கலாம்! ஆனால் பொறுப்புள்ள எதிர்க்கட்சி, இதுபோன்ற இயற்கைக் கோளாறுகளையெல் லாம் பயன்படுத்திக் கொண்டு அரசின் மீது பழியைப் போட முற்படுவது அரசியல் நாகரீகமாகாது என்பதை நமது கழகம் உணர்ந்திருக்கிறது. அதிலும் ஒன்பதாண்டுகாலம் நிர்வாகப்பொறுப்பிலே இருந்த ஒரு கட்சி, இப்போது ஏற்பட்டுள்ள வறட்சிநிலை, மின்வெட்டு போன்ற தொல்லைகளில் முடிந்த அளவு நிர் வாகத்திலிருப்பவர்களுக்குத் துணைநிற்கும என்பதையும் கடமை உணர்ச்சியுடன் குறிப்பிட விரும்புகிறேன். அன்புள்ள மு.க. 26-7-76