உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பழக்கூடை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42 பழக்கூடை அவனது பெயர் கூறவே மக்கள் தயங்குவர்; பெயரைக் கூறுவது அவன் பெருமையை இழிவு படுத்துமோ என்ற சந்தேகத்தால்! ஆகவே அவனை மேதை என்றே அழைத்தது இந்த மேதினி. • ,, சில புலவர்கள்கூட அழகாகச் சொல்லுவார்கள் அவனது பெயரைப்பற்றி. 'மே' என்பது உலகத்தொழிலாளரின் உற்சவதினம்; 'தை என்பது திராவிடத் தமிழரின் உழைப்பு வெற்றி தினம்: ஆகவே இரண்டு பெருந்திருநாட் களும் சேர்ந்தமைந்த பொருத்தமான பட்டம் மேதை என் நமது சிந்தை கவர்ந்தவனுக்குச் சிறப்பான பெயர் அமைந்து விட்டது என்று கூறி மகிழ்வர் பல்லோர். வயதோ முப்பது நிறையவில்லை. வாலிபத்தென்றல், அதற்குள்ளாக அவ னுக்கு வந்து குவிந்த புகழோ பெருங்குன்றம்! று ம் அவனைச் சுற்றி வாழ்த்து பாடியபடி எந்நேரமும் இருப்பர் மாணவரும். தொழிலாளரும், பண்டிதரும், பாமரரும்! தனக்கு எத்துணை பெருமை வளர்ந்திருக்கிறது என எண்ணும் போது, மணக்கும் அவன் நெஞ்சம். புகழ் கண்டு பூரிப்படை வான். ஆனாலும் அவன் உள்ளம் புகையும் எரிமலை போல இருந்ததை அவனால் மறைக்க முடியவில்லை. மறைப்பதற்கு மிகவும் கஷ்டப்பட்டான். புகழ்! புகழ்!! புகழ்!!! 6 யாருக்கு வேண்டும் இந்தப் புகழ்? சரித்திர விற்பன்னன் - ஜகம்புகழும் பூகோள மேதை-கணித நிபுணன்-கவிஞ ருக்கு மன்னன்-எழுத்து வேந்தன் என்றெல்லாம் உலகம் உளருகிறது அவனைப் பற்றி! ஆனால். அவனோ துடித்துக் கிடக்கிறான். "தொலையாதோ இந்தப்புகழ்" என்று மனம் வெடித்துச் சாகிறான். காரணம் அவனால் தனியே எங்கும் போக முடியாது. மாலை நேரத்தில் கடற்கரையில் உலாவி வரலாமா? முடியாது. கூடாது என்று தடையல்ல; அவன் போக முடியாதபடி புகழ் அவனைத் தடுத்தது. நூறு, ஆயிரம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பழக்கூடை.pdf/43&oldid=1696962" இலிருந்து மீள்விக்கப்பட்டது