உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இன முழக்கம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பழிக்குப் பழி "நம் நாடு வளமையாக இருக்க வேண்டு மானுால் நாட்டிலுள்ள வகுப்புவாதக் குரோதங்களை அடியோடு ஒழிக்க வேண்டும், மகாத்மாவின் வாழ் நாளில் முழுவெற்றி அடைய முடியாத வகுப்பு வாத ஒழிப்பை அவரது மரணத்தின் விளைவாக வேனும் பெற வேண்டும்.." இது திராவிடர் கழகத்துத் தீர்மானமல்ல! காங்கிரஸ் காரியக் கமிட்டி முடிவின் சாரம். நாம் வரவேற்கிறோம், 'சொன்னோம், சொல்கி றார்கள்' என்று பெருமைப்படுகிறோம். நமது பாசறை கீதத்தின் எதிரொலி இது என மகிழ்கிறோம். மதமெனும் பேய் பிடியாதிருக்க வேண்டுமென நாம் கூறிய காலத்தில் நமக்குக் கிடைத்தது நாத் திகர் பட்டம். இன்று அவர்கள் கருத்தில் இது கலக்க, காந்தியாரைப் பலிகொடுக்க வேண்டிய தாயிற்று.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இன_முழக்கம்.pdf/30&oldid=1701746" இலிருந்து மீள்விக்கப்பட்டது