உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கண்ணீர் வியர்வை இரத்தம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிப்பாய்களாக, இந்த இயக்கத்தைக் காக்கின்ற காவல் தெய்வங்களாக நான் பார்க்கிறேன். யார், யாரோ, யார்யாரையோ, தெய்வமே என்று வணங்கிக் கொண்டிருக்கிற இந்தக் காலகட்டத்தில், இந்த இயக்கத்தைக் காப்பாற்றிக் கொண்டிருக்கின்ற காவல் தெய்வங்களாம் உங்களை நான் கேட்டுக் கொள்கிறேன். உங்கள் கைகளை எடுத்து கண்களில் ஒத்திக்கொண்டு கேட்டுக்கொள்கிறேன். இந்தக் கழகத்தைக் காப்பாற்ற மிக மிக முக்கியமான தேவை. நம்மிடத்திலே இருக்கிற சிறு சிறு பிணக்குகளைக் கூட விட்டொழிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். திராவிடர் கழகத்தார் அடிக்கடி சொல்கிறார்களே நாங்கள் தேர்தலிலே ஈடுபடுகிற இயக்கமல்ல. எங்களுக்கு தேர்தல் பைத்தியம் கிடையாது. பெரியார் எங்களை அப்படி வளர்க்கவில்லை என்றெல்லாம் சொல்கிறார் களே. ஆனால் அண்ணா ஏற்ற பெரியாருடைய கொள்கை களை அண்ணா முதல் அமைச்சராக ஆகாவிட்டால், கழகம் ஆட்சிப் பொறுப்புக்கு வராவிட்டால் நிறைவேற்றியிருக்க பாருங்கள். முடியுமா என்பதை எண்ணிப் சுயமரியாதைத் திருமணங்கள் சட்டப்படி செல்லுபடியாக வேண்டும் என்பது பெரியாருடைய கொள்கைதான். பெரியாரால் ஆதரிக்கப்பட்ட காங்கிரஸ் தலைவர் காமராஜர் முதலமைச்சராக இருந்தபோது, அந்தக் கொள்கையை நிறைவேற்ற முடிந்ததா? எத்தனையோ முறை நானும் பேராசிரியரும் மற்றவர்களும் சட்டமன்றத்தில் மசோதா கொண்டு போனோம்: அதை காமராஜர் ஏற்றுக்கொண்டாரா? இல்லை. ஆனால் 21