உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/65

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65 கட்டிக்கொள்ளும் நேரத்திலே இரண்டடி உயரக் கட்டைகளையும் இரு கால்களிலும் கட்டிக்கொள்ளு வான். ஆட்டம் முடியும்வரை அவன் பார்ப்பவர் களுக்கு உயரமாகத்தான் தென்படுவான், அதைப்போலவே தான் காமராசர் என்ற இந்தப் புரவி நாட்டியக்காரர் தன்கால்களில் திராவிடர் கழகம் என்ற உயரமான கட்டைகளைக் கட்டிக்கொண்டிருக் கின்ற காரணத்தால் தான் உயரமாகத் தென்படுகிறார். இரவு புரவி நாட்டியம் நடைபெறுகிறவரை தான்- நாட்டிலே இருள் சூழ்ந்திருக்கிற வரைதான்-அந்த இரண்டடி உயரமுந்தெரியும். காலையிலே உதய சூரியன் உதயமாகி விட்டதும், அந்தக் கால் கட்டு அகற்றப்பட்டு விட்டதும், நிச்சயம் அவர் தனது உண் மையான ஐந்து அடி உயரத்திற்குத் தணிந்துதான் தீருவார் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது. ய காமராசர் தற்போது மீண்டும் சட்டசபைக் காங் கிரசுக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டி ருக்கிறார். மீண்டும் முதல் மந்திரியாக ஆக்கப்படு கிறார். காமராசரது இந்தத் தலைமையைக் குறித்து எந்தப் பத்திரிகையும் மகிழ்ச்சி யடையாத அளவுக்கு, இன்றைய தினம் காங்கிரஸ்காரர்களின் ஒரே தேசீய ஏடாக இருக்கிற 'விடுதலை' மகிழ்ச்சியைக் கொட்டு கிறது. ஏதோ பெரியார் அவர்கள் தான் இந்த நாட்டு முதல் மந்திரியாக ஆகிவிட்டாரோ என்று எண்ணக்கூடிய அளவுக்கு, திராவிடர் கழக ஏடு களும் - தொண்டர்களும் - தலைவர் என்று சொல்லப் படுகிற சிலரும் பூரிப்படைகிறார்கள் ; பெருமிதத்தால் புலம்புகிறார்கள். க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/65&oldid=1703252" இலிருந்து மீள்விக்கப்பட்டது