உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/69

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 - உட்காரப்போகும் சிங்காரத்தை-எழுப்பப் போகின்ற போர்க்குரலை - விவாதத்தை -நாட்டுக்கு நலன் பயக் கும் உரையாடல்களை அள்ளியள்ளிச் சுவைக்க -அதன் பயனாய் நாட்டுக்கு நேரப்போகும் நலனைக் காணத் தமிழகம் துடிதுடித்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் பதினைந்து பேர்கள் நம்மவர்கள். ஆகவே, பதினைந்து - நூற்றைம்பது என்ற அளவை மட்டும் கவனித்து - திராவிட முன்னேற்றக் கழகம் வலுவிழந்து விட்டது என்று கணக்கிட்டுவிட முடி யாது. நீங்கள் கதை ஒன்று கேள்விப்பட்டிருக்க லாம். ஒருவர் தன் இருபிள்ளைகளின் மூளை பலத்தை யும் சோதிக்கக் கருதினாராம். இருவரையும் அழைத்து, ஒவ்வொருவருக்கும் பத்து ரூபாய் தந்தார்; தனித் தனியாக இரு அறைகளையும் காட்டினார்; " நீங்கள் இருவரும் இந்தத் தொகையில் ஏதேனும் பொருள் வாங்கி உங்களது அறையை நிரப்ப வேண்டும் கவனியுங்கள் -- அறை நிறைய அப்பொருள் இருக்க வேண்டும்" என்று ஆணையிட்டார். - ஒருவன் - சிந்திக்கும் பண்பு படைத்த நல்லவன் கடைத்தெருவுக்குச் சென்றான். விளக்கு ஒன்றை வாங்கி, எண்ணெய் ஊ ற்றி, திரியிட்டு, ஒளியேற்றி அறையினுள் வைத்தான். அறை முழுதும் ஒளி எழுப்பினான். ஜோதிமழை பொழிய வைத்தான். ய - தன் மற்றவனோ பகுத்தறிவு அற்ற பிள்ளை அறையில் பத்து ரூபாய்க்கும் வைக்கோல் வாங்கி அடைத்து வைத்தான். தந்தை வந்தார்; பார்த்தார். இரண்டாமவனது அறையை. அட! முட்டாளே! இதற்கா நான் 5 6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/69&oldid=1703255" இலிருந்து மீள்விக்கப்பட்டது