உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சொல்லோவியம்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

157 சேர வேண்டுமென்று தான் திராவிடப் பெருமக்களை அழைக்கின்றோம். அப்படி அழைக்கும்போது தான் அழைக்கப்பட்டவர்களை அமைப்பு முறையில் நடத்திச் செல்லக் கழகம் இன்னும் செப்பனிடப்பட வேண்டு மென்று கேட்டுக்கொள்ளுகிறேன். செயல்முறைத் திட்டங்களில் சிறிது அயர்ந்து விட்டது கழகம். என் னும் போது அந்தக் குற்றவாளிப் பட்டியலிலே நானும் அடங்கியிருக்கிறேன் என்பதை நினைவுபடுத் திக் கொண்டுதான் சொல்லுகிறேன். நம் குற்றம் கொள்கையை சிதறிக் கிடக் ம் சக்தியை ஒன்றுபடுத்தாதது தான் - சிந்திக் கிடக் கும் மலர்களை மாலையாக ஆக்காததுதான் அந்த அருமையான செயல் இந்த ஆண்டு தொடங்கி விடு மென்று நம்புகிறேன். அதற்கான விடிவெள்ளி முளைத்திருக்கிறதாக உணர்கிறேன். சென்னை தங்கச் சாலை வீதியிலே தலைமை நிலையம் பணிபுரியத் தொடங்கி விட்டதையும் நீங்கள் அறியவேண்டு மென்று கூறுகிறேன். மீறியதல்ல - GRM கு இந்த ஆண்டிலே நாம் வளர்ந்து விட்டோம். வரும் ஆண்டிலே நம் கையிலே வேலேந்திப் புறப்படப்போகிறோம். தோழர்களே ! இந்த வேலேந்தி என்ற வார்த்தைகூட எதிரிகட்கும் சர்க்காருக்கும் பயங்கரமாகத் தோன்றும். பயப்படத் தேவையில்லை. கொள்கையை வேலாக்கி அறப்போர் ஆரம்பமாகப்போகிறது; என்பதை அறிவுறுத்து கிறேன் உங்கள் சார்பாக அரசியலாருக்கு. அடக்குமுறையை எதிர்த்து ஒரு போர் ! புத்தகங் களின் தடையை எதிர்த்து ஒரு போர்! நாடகத் தடைகளை மீறி ஒரு போர்! இப்படிப் போர்கள் நடக்கப் போவதில்லை. எல்லாவற்றையும் சேர்த்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சொல்லோவியம்.pdf/157&oldid=1703706" இலிருந்து மீள்விக்கப்பட்டது