உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பெருமூச்சு.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருமூச்சு தமிழ் மக்கள், காங்கிரஸ் ஆட்சியை ஒழிப்பதிலே, தங்கள் சகோதரர்களாகிய கேரளத்தாருக்கு இளைத்தவ ரல்ல என்ற பேருண்மையை நிரூபித்தாக வேண்டிய பொறுப்பு ஏற்பட் டிருக்கிறது. க டில்லி பார்லிமெண்டுக்கு தென் சென்னைத் தொகு திக்குக் காங்கிரஸ் சார்பிலே நிறுத்தப்பட் டிருப்பவர் தோழர் டி.டி.கிருஷ்ணமாச்சாரியார், அவர்கள். முத லாளித்வம், பிற்போக்குத் தன்மை வைதிகம் ஆகியவை களின் பாதுகாவலான காங்கிரஸ் டி. டி. கிருஷ்ணமாச் சாரியை தனது அபேட்சகராய் நிறுத்தி யிருப்பதைக் கண்டு யாரும் ஆச்சரியப்பட மாட்டார்கள் என்றே கருதுகிறோம். நம்முடைய ஆச்சரியமெல்லாம், திராவிடத்தின் தலை நகராகிய சென்னையிலே இப்படிப்பட்ட பண மூட் டைகளையும் பரம்பரைப் பண்பை விட்டுக் கொடுக்கா மல் திராவிடச் சமுதாயத்தைத் தங்கள் பாதத்தின் கீழ் மிதித்துத் துவைத்து நசுக்கிவரும் படாடோபக்காரரை மக்களின் பிரதி நிதியாக ஆக்க வேண்டுமென காங்கி ரஸ் இன்னும் கனவு காண்கிறதே என்பதுதான். தென் சென்னைத் திராவிட வாக்காளருக்குக் காங் கிரஸ் விடுத்திருக்கும் அறைகூவல், சவாலே டி. டி. கிருஷ்ணமாச்சாரியை நிறுத்தியிருப்பது என்பதை வலி யுறுத்திச் சொல்ல ஆசைப்படுகிறோம். 40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:பெருமூச்சு.pdf/42&oldid=1706285" இலிருந்து மீள்விக்கப்பட்டது