உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நெஞ்சுக்கு நீதி 1.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருச்சி சிறையிலுள்ள கான்விக்ட் ஆயுள் தண்டனை இருபது ஆண்டுகள். வார்டர்கள் பெரும்பாலும் பெற்றவர்கள்தான். ஆயுள் தண்டனை என்பது ஆனால் அவர்கள் நடந்து கொள்ளும் முறை-திருந்திய நட வடிக்கை - அயராத உழைப்பு—இவைகளின் காரணமாக அவர்களுக்கு 'நாட் கழிவு' தரப்பட்டு, இருபதாண்டுகட்குள்ளாகவே விடுதலையாகி விடும் வாய்ப்பு இருக்கிறது. ஆயுள் தண்டனை பெற்றவர்களும் பெரும்பாலும் தூக்கு மேடை யிலிருந்து திரும்பியவர்கள் தான்! தூக்கு மேடைக்குச் செல்லும் கைதிகளுக்காக ஒரு தனி இடம் இருக்கிறது. அதற்குப் பெயர். 'கண்டம்' என்கிறார்கள். அதுவும் திரிந்து தெளிந்த பெயர்தான் Condemned Prison என்பதுதான் 'கண்டம்' என்று மாறியிருக்கிறது. அங்கு வந்த மனிதனுக்கு ஒரு கண்டம் இருக்கிறது என்பதை அது குறிப்பதால், திரிந்த பெயரும் ஒருவாறு பொருந்தும். அந்தக் கண்டத்தில்தான் ஒரு காலத்தில் அண்ணாவும் பெரியாரும் வேறு இடமில்லாத காரணத்தால் பத்து நாட்கள் அடைக் கப்பட்டிருந்தார்கள். கண்டத்திலேயிருக்கும் கைதிகள் தனித் தனியே தான் வைக்கப்படுவார்கள். ஒவ்வொரு ஆளுக்கும் ஒரு காவல் உண்டு! அதற்குப் பக்கத்திலேயே சிறிது தூரத்தில் தூக்கு மேடையுமிருக்கிறது. நாங்கள் சென்ற பிறகு எட்டுக் குற்றவாளிகள் அந்த மேடை மூலம் உலக விடுதலை பெற்றிருக்கிறார்கள். மிகவும் சோகமான செய்தி யொன்று; ஒரு குற்றவாளிக்கு ஆயுள்தண்டனை கிடைத்திருந்தது. அவன் அதையும் மறுத்து அப்பீல் செய்தான். அப்பீலில் அவனுக்குத் தூக்குத் தண்டனை கிடைத்துவிட்டது. அவன் நிலைமை எப்படியிருக்குமென்பதை நீங்களே யோசித்துப் பார்த்துக்கொள்ளுங்கள். அக்டோபர் மாதம் 15ஆம் தேதி சூரியனைக் காணாமலே அவன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டுவிட் 232