பக்கம்:இருளடைந்த பங்களா.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

27

பலவீனமும் சோர்வும்தான் நான் புரிய முடிந்தவை இடைக்காலத்தில் எத்தனையோ நாட்கள் ஒடிவிட்டன. என்பதும் தெரிந்தது.” குமாரி பவானியின் இந்த வாக்குமூலத்தைப் பற்றி என்ன கருத்துரை வழங்குவது என்றே தெரியவில்லே மற்றவர்களுக்கு. ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தனர்; கண்கள் எவ்வளவோ பேசின; ஆனால் வாய் திறந்து யாரும் சொல்லுதிர்க்க வில்லை. 'விரைவில் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்றார் இன்ஸ்பெக்டர். 'ஆமாம், எசமான்' என்று ஆமோதித்தார் ஏட்டய்யா. என்ன நடவடிக்கையை எப்படி எடுப்பது என்பது தான் அவர்களுக்கும் புரியவில்லை.

                        7

'ரெண்டுங்கெட்டான்புர'வாசிகள் தங்கள் சாமர்த்தியத்தில் மட்டுமே நம்பிக்கை கொண்டிருந்தார்களானால் அவர்கள் இந்தச் சன்மத்தில் குற்றவாளியை சரியாகச் சிக்கவைத்திருக்க முடியாது! சந்தர்ப்பம் அவர்களுக்கு நன்கு துணைபுரிந்தது. அதனால்தான், பெரிய மனிதர் மாதிரிப் பம்மாத்துப் பண்ணி வாழ்ந்த ரத்த வெறியனே அவர்கள் 'கையும் களவுமாகப்' பிடிக்க முடிந்தது. மணலாற்றில் வெள்ளம் புரண்டு வடிந்து சில மாதங்கள் தான் ஆகியிருந்தன. ஆற்றங்கரையில் காடாக வளர்ந்து கிடந்தது தனிரகப் பசுங்கொடி, அதன் நடுவே ஒரு ஆள் நின்றால், அவன் இடுப்புக்கு மேல் பாகம் தான் வெளியே தெரியும், கீழ்ப் பகுதியைக் கொடிப் புதர் விழுங்கி விட்டது போலவே தோன்றும். ஒருநாள் இரவு. மூடுபனி எங்கும் கவித்து கிடந்தது. நிலவு மங்கலாக அழுது வழிந்து கொண்டிருந்தது. ஆற்றின்