உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:புதுமைப்பித்தன் கதைகள், 1955.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31

துன்பக் கேணி 31. கட்டில். எதிரே பிள்ளைகள் உட்கார்ந்துகொள்வதற்கு மணைகள். கூலிக்காரப் பிள்ளைகளுக்கு இது போதாதா? மேஜையின் வலப்புறத்தில் தேயிலைத் தோட்டத்தின் அதிகாரிகளின் குழந்தைகளுக்கு நாலைந்து நாற்காலிகள். பிள்ளைகள் எண்ணிக்கை இருபதுக்குமேல் போகாது. டாக்டருடைய இரண்டு சிறுமிகள், தேயிலை ஸ்டோர் குமாஸ்தாக்களின் மூன்று பையன்கள் - அவர்கள் எல் லோருக்கும் இனிமேல் தான் அட்சராப்பியாசம். பதினைந்து கூலிக்காரக் குழந்தைகள். எல்லாம் ஆறு வயதுக்கு மேற்படாதவை. ராமச்சந்திரனுக்கு உபாத்திமைத் தொழிலில் ஒரு கிறுக்கு. அதிலும் கொஞ்சம் இலட்சியங்களும் அவனைப் போட்டு அலைத்தன. இல்லாவிடில் அவன் ஏன் பி.ஏ. படித்துவிட்டு, தகப்பனார் சிபார்சில் கிடைக்கவிருந்த உத்தியோகத்தையும் தள்ளிவிட்டு, இங்கு வரவேண்டும்? ராமச்சந்திரன் நல்ல அழகன். குழந்தைகளில் அவன் வித்தியாசம் பாராட்டுவது கிடையாது. கூலிக்காரக் குழந்தைகள் தங்கள் மடத் தனத்தினால் அவனைக் கோபமூட்டுவதும் உண்டு. ஆனால் மாகிவிட்டால். குழந்தைகள் 'ஸாரு'டன் சாயங்கால விளையாடாமல் வீட்டுக்குச் செல்வதில்லை. கதை குழந்தைகளுக்குக் கேட்பதில் ரொம்பப் பிரியம். அதிலும் "ஸார்' கதை சொன்னால் நேரம் போவதுகூடத் தெரியாது. ராமச்சந்திரன், தன் பள்ளிக்கூடத்தின் முன்பு கொஞ் சம் அலங்காரமாக இருப்பதற்கு. புஷ்பச் செடிகள் வைத்துப் பயிர் செய்யவேண்டும் என்று நினைத்தான். ரோஜாப் புஷ்பங்கள் வனாந்தரமாக முளைத்துக் கிடக்கும் அப்பக்கத்தில், அதற்கு மட்டிலும் குறைவில்லை. மற்றச் செடிகளின் கன்றுகள் ஸ்டோர் மானேஜரின் வீட்டில் தான் ஏராளம்.

அதனால் தான் ராமச்சந்திரன் மரகதத்துடன் பேசிப் பழக நேர்ந்தது.